Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளை மாளிகையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

அமெரிக்காவின் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அமெரிக்க அதிபர் வசிக்கும் இடம் வெள்ளை மாளிகை என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மிகப் பெரிய பாதுகாப்பு வட்டத்துக்குள் வெள்ளை மாளிகையும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் டிரம்ப், அவர் மனைவி ஆகியோர் தற்போது புளோரிடா சென்றுள்ளனர்.இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளை மாளிகையின் வடக்கு பகுதியில் நடமாடி உள்ளார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார்/. அத்துடன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த அமெரிக்க ரகசியத் துறை போலீசார், “அந்த நபர் யாரென்பது இன்னும் தெரியவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்தும் அந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என கூறி உள்ளனர்.

Previous Post

புது வசந்தம் இன்னிசை நிகழ்வு -கனடா

Next Post

தென்கொரியா குழு நாளை வடகொரியாவுக்கு பயணம்

Next Post

தென்கொரியா குழு நாளை வடகொரியாவுக்கு பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures