Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்கள வாக்குகளுக்காக காத்தான்குடியில் கூட்டம் நடத்திய மஹிந்த

January 29, 2018
in News, Politics, World
0

குருணாகல் பன்னல பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை (27) மாலை பன்னலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

மஹிந்த ராஜபக்ஷ காத்தன்குடியில் கூட்டம் நடத்துவது முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக அல்ல. முஸ்லிம்களின் ஆதரவு தனக்கில்லை என்றதொரு சூழலில், தனக்கு ஆதரவு இருப்பதை காட்டவேண்டும் என்பதற்காக இப்படி பாரிய கூட்டத்தை காத்தன்குடியில் நடத்தியிருக்கிறார். காத்தான்குடியில் மஹிந்த கூட்டம் நடத்தினாலும் சரி, பொது பல சேனா கூட்டம் நடத்தினாலும் சரி மக்கள் வருவார்கள்.

கூட்டங்களில் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்பதற்காக வருபவர்களை, மஹிந்தவின் ஆதரவாளர்களாக கருதமுடியாது. மஹிந்த ராஜபக்ஷ வந்திருக்கிறார், அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்பதற்காக ஒரு பெரிய கூட்டம் வரும். அங்கு கூட்டம் கூடியதற்காக காத்தான்குடியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்கு இருக்கின்றது என்று யாரும் கருதமுடியாது.

முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லையென்றும், இதனால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றும் நம்பிக்கொண்டிருக்கும் சிங்கள மக்களை திசைதிருப்புவதற்காவே காத்தான்குடி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மதில் மேல் பூனையாக இருக்கின்ற சில சிங்கள வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில், முஸ்லிம்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், காத்தன்குடியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்கு சேகரிக்கலாம் என்று யாரும் கனவில் கூட நினைக்க முடியாது.

கடந்த ஆட்சிக்காலத்தில் அனுபவித்த அட்டூழியங்கள் மற்றும் அட்டகாசங்களுக்கு மத்தியில், இந்த தேர்தலை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டில் இருக்கின்றனர். எமது ஆட்சிக்காலத்தின் நடுப்பகுதியில் வந்திருக்கின்ற இத்தேர்தலில் எப்படியாவது உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி தமது பலத்தை நிரூபிப்பதற்கு மொட்டு அணியினர் தீவிரமாக முயற்‌சித்துக்கொண்டிருக்கின்றனர்.

தேசிய கட்சிகள் நினைத்தபடி வட்டார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு சாவுமணி அடித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால், சிறுபான்மை சமூகங்கள் சரியான அணுகுமுறையோடு, திட்டமிட்டு செயற்பட்டால் எமக்கு பாரிய நன்மைகள் கிடைக்கும் என்பதை பெரிய கட்சிகள் இந்த தேர்தல் முடிவுகளில் உணர்ந்துகொள்ளும்.

புதிய கலப்புத் தேர்தல் முறை ஆரம்பத்தில் பெரிய கட்சிகளுக்கெல்லாம் வாய்ப்பாகத்தான் இருக்கப்போகின்றது. சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடும் என்ற அச்சத்தோடு கடந்த 3 வருடங்களாக இந்த தேர்தல் முறையில் பல மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற போராட்டங்களை நடத்திவந்தோம்.

அவ்வாறு நடைபெற்ற மாற்றங்களில் பூரண திருப்தியில்லாத நிலையில், முன்பிருந்த தேர்தல் முறையை விடவும் புதிய தேர்தல் முறையில் எங்களுக்கு ஆசனங்கள் குறைந்துவிடும் என்‌ற அச்சத்திலேயே நாங்கள் இருந்தோம். ஆனால், குருணாகல் மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களுக்கும் சென்றுவந்த பின்னர்தான் நாங்கள் அச்சப்படத் தேவையில்லை, பெரிய கட்சிகள்தான் அச்சப்பட வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆட்சி மாற்றத்துக்கான அரைகூவலை அவ்வப்போது செய்யக்கூடிய அந்தஸ்தில் எமது கட்சி இருந்துகொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, நாட்டை பாதித்த விடயங்களிலிருந்து விடுவிக்கக்கூடிய முறையில் எங்களுடைய அணுகுமுறைகள் அமைந்திருந்தன.

முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அடையாளர் பெற்‌றவர்கள் அதற்கு எதிராக, சொந்தமாக கட்சி அமைத்து இந்த இயக்கத்தை அழிப்பதற்கு புறப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வலிமையடைந்திருக்கிறது என்பது அவர்களுக்கு வருத்தமான செய்தியாக இருக்கிறது என்றார்.

Previous Post

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

Next Post

உள்ளுராட்சித் தோ்தல் : இம்முறை வன்முறைகள் மிகக் குறைவு

Next Post
உள்ளுராட்சித் தோ்தல் : இம்முறை வன்முறைகள் மிகக் குறைவு

உள்ளுராட்சித் தோ்தல் : இம்முறை வன்முறைகள் மிகக் குறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures