Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இந்தியா ‘உலக சாம்பியன்’: பார்வையற்றோர் கிரிக்கெட்டில்

January 21, 2018
in Sports
0

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில், சுனில் ரமேஷ், கேப்டன் அஜய் அரைசதம் கடந்து கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பார்வையற்றோருக்கான 5வது உலக கோப்பை கிரிக்கெட் (40 ஓவர்) தொடர் நடந்தது. நேற்று, சார்ஜாவில் நடந்த பைனலில், ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, 2 முறை கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. முதலில் ‘பேட்டிங்’ செய்த பாகிஸ்தான் அணி, 40 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு பதார் முனிர் (57), ரியாசத் கான் (48), கேப்டன் நிசார் அலி (47) கைகொடுத்தனர்.

சுனில் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, 15 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. பின், 16வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. பின் இணைந்த சுனில் ரமேஷ், கேப்டன் அஜய் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். இதனையடுத்து இந்திய அணி, 25 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அபாரமாக ஆடிய சுனில் ரமேஷ் (93) சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அப்போது இந்திய அணி, 35 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது முறை: சிறிது நேரத்தில் கேப்டன் அஜய் (62) உட்பட 4 பேர் அவுட்டாக, போட்டியில் திருப்பம் ஏற்பட்டது. பின் வந்தவர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி, 38.2 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், 2014ல் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் நடந்த பைனலில், இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இதனையடுத்து, பார்வையற்றோருக்கான உலக கோப்பை அரங்கில், அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில், முதலிடத்தை பாகிஸ்தானுடன் (2002, 2006) பகிர்ந்து கொண்டது இந்தியா (2014, 2018). இவ்விரு அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றன. தவிர இந்திய அணி, பாகிஸ்தானுக்கு பின், தொடர்ச்சியாக 2 முறை உலக கோப்பை வென்ற அணி என்ற பெருமை பெற்றது. ஒரு முறை தென் ஆப்ரிக்க அணி (1998, எதிர்: பாகிஸ்தான், இடம்: டில்லி, இந்தியா) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Previous Post

சோயிப் மாலிக் விலகல்

Next Post

அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து சாதனைப் படைக்குமா?

Next Post
அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து சாதனைப் படைக்குமா?

அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து சாதனைப் படைக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures