Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆஜர்

January 11, 2018
in News, Politics, World
0

ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் நேற்று காலை 10.35 மணி அளவில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவரிடம் ஆணையம், ஜெயலலிதாவை எப்போது முதல் உங்களுக்கு தெரியும்? எவ்வளவு காலம் ஜெயலலிதாவிடம் பணியாற்றினீர்கள்? முதல்–அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா எடுத்துக்கொண்ட மருந்துகள் விவரம் தெரியுமா? அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது நடந்த நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் மருத்துவமனையில் அவருடன் இருந்தீர்களா? அவருக்கு யார், யார் சிகிச்சை அளித்தார்கள்? என்ன வகை சிகிச்சை அளிக்கப்பட்டது? என்பன போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

தெரிந்த தகவல்களை மட்டும் அவர் தெரிவித்தார். தெரியாத கேள்விகளுக்கு தெரியவில்லை என்று கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட வேண்டியிருப்பதால் மீண்டும் 23–ந் தேதி ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் அவருக்கு உத்தரவிட்டது.

பின்னர் வெளியே வந்த பூங்குன்றனிடம், ‘ஆணையம் சார்பில் உங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது? நீங்கள் ஏதாவது ஆவணங்கள் சமர்ப்பித்தீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பூங்குன்றன், ‘இன்று அஷ்டமியாக இருப்பதால் எதுவும் பேச முடியாது. ஜெயலலிதாவுக்காக இதைக்கூட செய்யமாட்டேனா என்ன? விசாரணை முடிந்த உடன் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கமாக பேசுகிறேன்’ என்று கூறி சென்றார்.

மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மதுரை பாலன் என்பவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக செவி வழி தகவல்கள் எனக்கு அதிகம் தெரியும் என்பதால் என்னையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதால் அவரும் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி இன்று (புதன்கிழமை) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு முக்கிய பிரமுகருக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லவிருப்பதால் இன்று ஆஜராக இயலாது. எனவே வேறொரு தேதியை ஒதுக்கும்படி கோரி மனு அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஒரு தேதி ஒதுக்கப்படும் என்று கூறியது.

விசாரணை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:–

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் தனக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் சாட்சியங்கள் நகல் மற்றும் விவரங்களை அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த நகல் ஆணையத்தில் தயார் நிலையில் உள்ளது. இன்று விசாரணை நடைபெறாததால் சசிகலா தரப்பு வக்கீல்களிடம் நகல் அளிக்கப்படும்.

கடந்த சில நாட்களாக விசாரணை ஆணையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்றும் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கணினி செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தடைபட்டது. புகார் செய்தபின்னர் அதிகாரிகள் சரிசெய்தனர். விசாரணை ஆணையத்துக்கு என்று தனியாக ஒரு மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Previous Post

சட்டசபையில் சபாநாயகரை கண்டித்து தி.மு.க., டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு

Next Post

மும்பை உணவக தீ :கட்டட உரிமையாளர்கள் கைது

Next Post

மும்பை உணவக தீ :கட்டட உரிமையாளர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures