நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை தன்னகத்தே வைத்திருந்த ஒருவர் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்ற பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் 22 வயதான ஜம்பட்டாவீதி பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவரை அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது












