Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெருவில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் உயிரிழப்பு

January 3, 2018
in News, Politics, World
0

பெருவில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டின் தலைநகரான லீமாவில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் பசமாயோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இது கடற்கரை நகரமாகும். இப்பகுதிக்கு செல்லும் சாலைகள் கடற்கரையையொட்டிய மலைப்பாதைகளாக உள்ளன.

மிகவும் அபாயகரமான இந்த சாலைகளை ஒட்டி சுமார் 100 அடி ஆழ பள்ளங்கள் உள்ளன. இந்நிலையில் பசமாயோ நகரில் இருந்து 57 பயணிகளுடன் லீமா நகரை நோக்கி ஆபத்தான வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரியில் மோதியது.

இந்த விபத்தில் 100 அடி ஆழமுள்ள சரிவில் பேருந்து கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் ஹெலிகாப்டரில் மீட்பு பணிகள் நடைபெற்றது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 36 பேர் உயிரிழந்தனர். மேலும் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடைமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புபடை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

என் தாய்க்காக: இது ராணாவின் சபதம்

Next Post

அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்கா தயார்

Next Post
அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்கா தயார்

அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்கா தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures