Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகின் முதல் ஒட்டக மருத்துவமனை

December 19, 2017
in News, World
0

துபாயில் முதல் முறையாக ஒட்டகத்திற்கு என தனி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. 64 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனை இயக்குநர் பேசுகையில், ‘குதிரைகளுக்கு தனி மருத்துவமனை உள்ளது. ஆனால் ஒட்டகத்திற்கு அமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். எங்கள் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். ஒட்டகத்திற்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது. அதற்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்ய வேண்டும்.

அடுத்த ஆண்டிற்குள் அறுவை சிகிச்சை அறை, எக்ஸ்-ரே அறை, எம்.ஆர்.ஐ. மற்றும் சி.ஏ.டி. ஸ்கேன் போன்ற வசதிகள் விரைவில் செய்யப்படும்’ என கூறினார்.

ஒட்டகத்திற்கு சிகிச்சை செய்வதற்கான கருவிகளை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் ஒட்டகம் தங்குவதற்கு என முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டகத்திற்கு சிகிச்சை செய்ய பிரிட்டன் மற்றும் மெக்சிகோவிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

Easy 24 News.com கிருபா கிருஷான் விருது பெற்றார்

Next Post

எரியும் காருக்குள் சிக்கித் தவித்த தாய்

Next Post

எரியும் காருக்குள் சிக்கித் தவித்த தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures