Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலேசிய பிரதமரை வடக்கிற்கு அழைக்கிறார் முதல்வர் விக்கி

December 19, 2017
in News, Politics, World
0

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கை வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசிய வெளிவிவகார அமைச்சின் ஊடாக, அவர் விடுத்துள்ள வேண்டுகோளில்,

‘வடக்கில் மலேசியப் பிரதமர் பயணம் மே்றகொண்டால், இங்குள்ள நிலைமைகளின் உண்மைத்தன்மையை காண்பிக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைக்கும் என்றும்,இலங்கைக்கான பயணத்தின் முக்கிய நிகழ்வாக அது அமையும்’ என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக மலேசிய வெளிவிவகார அமைச்சிடம் இருந்து பதில் இன்னும் வரவில்லை என்றும், எனினும் சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் நேற்றுக்காலை கூறியிருந்தது.

முன்னதாக, மலேசிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சரையும் மலேசியப் பிரதமர் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

அதேவேளை, இன்றுடன் மலேசியப் பிரதமர் இலங்கை பயணத்தை நிறைவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தெற்காசிய பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ சிறந்த நாடாக இலங்கை

Next Post

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானசேவை ரத்து

Next Post

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானசேவை ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures