Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவா?

December 12, 2017
in Cinema, News, Politics
0

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு நிலவுகிறது.

முக்கிய பிரமுகர்கள் என்ற பெயரில் கடந்த 7 ஆண்டுகளாக அதிகாரி ஒருவர், பணத்தை பெற்றுக்கொண்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கிறார். தேவஸ்தானத்தில் முற்றிலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது, ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

அவர்களுக்கு அனைவரின் ஆதரவும் இருக்கும்.

ஆனால் பொழுதுபோக்கிற்காக மற்ற அரசியல் கட்சிகளை ஊக்குவிக்க அரசியலுக்கு வரகூடாது’ என்றார்

Previous Post

கேரளாவை உலுக்கிய ஜிஷா கொலை வழக்கு

Next Post

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்தால் வழக்கு

Next Post
கட்டுப்பாட்டு விலையை மீறி  விற்பனை செய்தால் வழக்கு

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்தால் வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures