Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உங்கள் தேர்தல் சண்டைக்கு எங்களை இழுக்காதீர்கள்

December 11, 2017
in News, Politics
0
உங்கள் தேர்தல் சண்டைக்கு எங்களை இழுக்காதீர்கள்

குஜராத் தேர்தலில் பா.ஜ.,வை தோல்வி அடையச் செய்ய காங்., சதி செய்கிறது. குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக பிரதமர் மோடி நேற்று குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது பைசல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், காங்., மூத்த தலைவர்கள் பாக்., அதிகாரிகளை ரகசியமாக சந்தித்து 3 மணிநேரம் பேசியதாக மோடி கூறி உள்ளது ஆதாரமற்ற, பொறுப்பற்ற பேச்சு. உங்களின் நாட்டுக்குள் நடக்கும் தேர்தல் சண்டைக்கு எங்களை இழுக்காதீர்கள்.

அனைத்திற்கும் பாக்.,கை இழுத்து பேசுவதை இந்தியா நிறுத்த வேண்டும். பாக்., மீது பழி போடுவதை விடுத்து, உங்களின் தனிப்பட்ட பலத்தை காட்டி தேர்தலில் வெற்றி பெறுங்கள். மணிசங்கர் அய்யர் இல்லத்தில் நடந்த ரகசிய ஆலோசனையில் பாக்., தூதர், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார்கள் என மோடி ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என தெரிவித்துள்ளார்.

Previous Post

சுமந்திரன் விலத்தியிருப்பதே, தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவை

Next Post

தனியாா் கல்வி நிலையம் தீக்கிரை

Next Post

தனியாா் கல்வி நிலையம் தீக்கிரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures