Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடலில் தத்தளித்த 5 இலங்கையர்களை மீட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்!

December 5, 2017
in News, World
0

படகு கவிழ்ந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் ஐந்து பேரை ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளது.

ஈரான் ஊடகமான, இர்னா செய்தி நிறுவனம் இந்த தகவல் வெளியிட்டுள்ளது.

படகு கவிழ்ந்த நிலையில், அதன் மீது ஏறி நின்று உதவி கோரிய ஐந்து இலங்கை மீனவர்களை ஈரானிய எண்ணெய்க் கப்பல் காப்பாற்றியது.

கடும் மழைக்கு மத்தியில் மீனவர்களை மீட்கும் போராட்டம் ஐந்து மணிநேரம் நீடித்ததாக, ஸ்ட்ரீம் என்ற எண்ணெய் தாங்கி கப்பலின் தலைவர் மஹ்மூத் பக்கெஸ்தானி தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பாதுகாப்பாகவும், பேசக் கூடிய நிலையிலும் இருப்பதாகவும், நாளை மறுநாள் இவர்களை சபஹார் துறைமுகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

இந்த மீனவர்கள் 2-3 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

தெஹ்ரானில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள், மீட்கப்பட்ட மீனவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Previous Post

அமீரகத்தில் கார் கழுவியே பல கார்களுக்கு அதிபரான இந்தியர்!

Next Post

மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதி மயானத்தில் இருந்து 15 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன

Next Post

மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதி மயானத்தில் இருந்து 15 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures