Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“காலைக்கதிர்” பத்திரிகையின் முன்னாள் பணியாளர் கிணற்றில்சடலமாக மீட்பு!

December 1, 2017
in News
0
“காலைக்கதிர்” பத்திரிகையின் முன்னாள் பணியாளர் கிணற்றில்சடலமாக மீட்பு!

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது வேலணையில் வசித்து வந்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி(வயது 32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில் தோட்டக்காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வேலணையில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11. 30 மணியளவில் இவரைக் காணவில்லை என தேடிய போது நேற்று அதிகாலை 1. 00 மணியளவில் அயலில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. உதயன் பத்திரிகை நிறுவனத்தில் விளம்பரப்பிரிவில் பல வருடங்களாக பணியாற்றி பின்னர்கடந்த வருடம் அங்கிருந்து விலகி ” காலைக்கதிர்” பத்திரிகை நிறுவனத்தின் விளம்பரப்பிரிவில் சில மாதங்கள் பணியாற்றினார். திருமணத்தின் பின்னர் வேலணையில் வசித்து வந்தமையால் இவர் பத்திரிகை அலுவலகப் பணியினை இடைநிறுத்தியிருந்தார்.

இவரது இறுதி நிகழ்வுகள் இன்று பொன்னாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஸ்மார்ட்போன் பேட்டரி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

Next Post

அனர்த்தம் ஏற்பட்டால் உடனே அழையுங்கள்

Next Post
போக்குவரத்து தடையை சீர்செய்ய விசேட ஏற்பாடு

அனர்த்தம் ஏற்பட்டால் உடனே அழையுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures