Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜய் மல்லையாவின் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவு

November 18, 2017
in News, Politics, World
0

அபராத தொகை செலுத்த தவறியதால் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு பரிவர்த்தனை கணக்கு உள்ளிட்டவற்றை முடக்குமாற சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்திய பங்கு பரிவா–்த்தனை வாரியம்(செபி) உத்தரவிட்டுள்ளது. இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா தொடங்கிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலானது.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

மேலும் கிங்பிஷருக்காக வாங்கிய கடனை அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் வெளிநாடுகளில் அவர் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அவர் லண்டன் தப்பினார்.

அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றத்தில் இந்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் அவரது இந்திய சொத்துக்கள் சிலவற்றை விற்பனை செய்ய வங்கிகள் நடவடிக்கை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு பரிவர்த்தனை கணக்குகளை முடக்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.

மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குகளை கடந்த 2015ம் ஆண்டு விற்பனை செய்ததற்கான விவரங்களை செபியிடம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் சமர்ப்பிக்கவில்லை. இதனால் அப்போது அந்த நிறுவனத்துக்கு ரூ.

15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை மல்லையா இதுவரை செலுத்தவில்லை.

தற்போது வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 18. 5 லட்சம் அவர் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த அபராதத்தை வசூலிக்கும் விதமாக மல்லையாவின் 7 சதவீத பங்குகள் இருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின ்அனைத்து வைப்பு மற்றும் பங்கு பரிவா–்த்தனை கணக்குகளை முடக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.

Previous Post

கர்நாடகாவில் மருத்துவமனைகள் ஸ்டிரைக்: 24 நோயாளிகள் பரிதாப சாவு

Next Post

17 வயது மாணவியை கடத்தி சென்று 10 நாட்களாக பாலியல் பலாத்காரம்

Next Post

17 வயது மாணவியை கடத்தி சென்று 10 நாட்களாக பாலியல் பலாத்காரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures