Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

தனக்கு தானே திருமணம் செய்த பெண்!!

November 4, 2017
in Life, News, World
0
தனக்கு தானே திருமணம் செய்த பெண்!!

தனக்கு தானே திரு­மணம் செய்து உல­களவில் பிர­ப­ல­மான பெண் தற்­போது தன்னை விவா­க­ரத்து செய்யப்போவ­தாக தெரி­வித்­துள்ளார்.

லண்­டனில் பிரிங்டன் என் னும் பகு­தியில் வசித்து வரும் சோபியா என்ற பெண் கடந்த வருடம் அவரை அவரே திரு­மணம் செய்து கொண்டார். இதனால் உலகம் முழு­வதும் பிர­பலம் அடைந்தார். உலகில் உள்ள ஆண்கள், பெண்கள் யாரையும் தனக்கு பிடிக்­க­வில்லை என்றும் எனக்கு என்­னைத்தான் பிடித்­தி­ருக்­கி­றது என்றும் அப்­போது கூறி­யி­ருந் தார்.

இதற்­காக நிஜ திரு­மணம் போல கோலா­க­ல­மாக அரங்கம் அமைத்து வெள்ளை நிற உடை அணிந்து தனக்குத்தானே மோதிரம் மாற்றிக்கொண்டார். இதன் மூலம் அவர் ஒரே நாளில் வைரலாகத் தொடங்­கினார்.

இதை­ய­டுத்து காதலில் விரு ப்பம் இல்­லாத பலர் இவரைப் பின்­பற்றி தனக்குத்தானே திரு­மணம் செய்யும் முடிவை எடுத்திருக்­கின்­றனர். ‘சோலோ ­காமி’ என்று அழைக்­கப்­படும் இந்த திரு­மண முறை தற்­போது அங்கு மிகவும் பிர­பலம் ஆகி­யி­ருக்­கி­றது. இந்த முறையின் மூலம் பெண்கள் மட்டும் இல்­லாமல் நிறைய ஆண்­களும் தனக்­குள்­ளேயே திரு­மணம் செய்துகொள்ள தொடங்கி இருக்­கி­றார்கள். இந்த திரு­மணம் நிஜ திரு­மணம் போல் நடந்­தாலும் இங்­கி­லாந்து நாட்டில் அதற்கு அங்­கீ­காரம் அளிக்­கப்­பட முடி­யாது என்று கூறப்­பட்டிருக்­கி­றது.

இந்த நிலையில் சோபியா என்ற அந்த பெண்­மணி தற்­போது”தனக்கு தன்­னுடன் வாழ்­வது மிகவும் கடி­ன­மாக இருப்­ப­தா­கவும், அடிக்­கடி தனக்குள் சண்டை போட்டுக் கொள்­வ­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார். மேலும் இப்­ப­டியே சண்டை போட்டால் தன்னை தானே வெறுத்­து­வி­டுவேன்” என்­பதால் தன்னை விவா­க­ரத்து செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­துள்ளார். அவரின் இந்த அறி­விப்பால் அவர் மீண்டும் பிர­பலம் ஆகி­யி­ருக்­கிறார்.

இந்­நி­லையில் அவர் இந்த விவா­க­ரத்­துக்கு தற்­போது புதி­ய­தொரு காரணம் ஒன்றும் கூறி­யி­ருக்­கிறார். அதன்­படி அவர் ‘ரவுரி பாராட் ‘ என்ற இன்­னொரு ஆணுடன் காதலில் இருப்­ப­தாக கூறி­யுள்ளார். மேலும் இன் னும் சில மாதங்­களில் அந்த ஆணை திரு­மணம் செய்­து­கொள்ளப்போவ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். மேலும் அந்த ரவுரி பாராட் என்­ப­வரும் சில வரு­டங்­க­ளுக்கு முன்பு தனக்­குள்­ளேயே காத­லித்து திரு­மணம் செய்து கொண்­டவர் ஆவார். இவர்கள் இருவரும் தனக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டது அதிகாரபூர்வமாக செல்லாது என்பதால் இவர்களால் விவா கரத்தும் பெற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

சவப்பெட்டியில் சுவாசிக்க ஆரம்பித்த சடலம்!!

Next Post

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, ஜப்பான் போர் விமானங்கள் பயிற்சி

Next Post

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, ஜப்பான் போர் விமானங்கள் பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures