தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
இன்றைய தினம் வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றுக்கு மாணவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் இடம்பெறவிருக்கிறது.