Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி.!

October 21, 2017
in News, Politics
0
கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி.!

நாட்டின் சவால்களை வெற்றிகொள்வதற்கு தமது அறிவு மற்றும் அனுபவங்களுடன் கூட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றுடன் இணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதீப பிரணாம’ விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணி இன்று எவ்வளவு தூரம் நிறைவேற்றப்படுகிறது என்பது கேள்விக்கிடமாகவுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்துப் பொறுப்புக்களும் அரசியல்வாதிகளிடம் மட்டும் விட்டுவிடப்படுவதாக சமூகத்தில் நிலவும் பிழையான கருத்து விரைவில் சரி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் குரல் அத்தியாவசியமானதாகும் என்பதுடன், அவர்கள் தாமதமின்றி தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முன்வர வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இனப்பிரச்சினையிலும், நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்திலும் சிறந்ததோர் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் பக்கசார்பற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏனைய சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்களது அறிவு மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார்.

எமது நாடு கல்விமான்களை உருவாக்குவதில் எந்த வகையிலும் பின் நிற்காதபோதும், நாடு குறித்து சிந்திக்காது கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வது அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரிய சவாலாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதிகள் என்ற வகையில் அதற்குத் தீர்வு வழங்க முற்படுகையில் அதனை அரசியல் சார்பானது என சிலர் அடையாளப்படுத்த முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறானபோதும் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் தாய் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான தருணம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தில் இருந்து உருவான திறமைவாய்ந்தவர்களை பாராட்டுவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் 42 பேர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

Previous Post

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Next Post

வைத்தியத் துறை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

Next Post
வைத்தியத் துறை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

வைத்தியத் துறை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures