Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சி.சி.டி.வி.யை பார்த்தவாறு திருடிய திருடன்!

October 16, 2017
in News
0
சி.சி.டி.வி.யை பார்த்தவாறு திருடிய திருடன்!

சாரதி பயிற்சி நிலையம் ஒன்றுக்குள் கூரை பிரித்து உள் நுழைந்த திருடன் சி.சி.டி.வி கமெராவையும் பொருட்படுத்தாது, கமெராவை அவதானித்தவாறே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பதிவாகியிருப்பதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் பிரதான வீதி கடைத்தெருவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் பயிற்சி நிலையத்தின் அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த அலைபேசியொன்றும் 40,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக, சாரதி பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் வெள்ளக்குட்டி தாஹிர், ஏறாவூர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ள திருடனை அடையாளம் காண உதவுமாறு, பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

கூரையைப் பிரித்து பயிற்சி நிலையத்துக்குள் உள் நுழைந்த திருடன், லாவகமாகவும் பதற்றமின்றியும் அங்கிருந்த அலுமாரியை அமைதியான முறையில் துளாவி ஆராய்ந்து பணத்தையும் பொருட்களையும் தேடுவதும் அவ்வப்போது சி.சி.டி.வி கமெராவை நோட்டமிடுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Previous Post

ஏர் ஏசியா விமானம் தரையிறக்கம்

Next Post

இந்த நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்!

Next Post

இந்த நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures