Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவு வழங்குவோருக்கு அபராதம்

September 1, 2017
in News
0
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவு வழங்குவோருக்கு அபராதம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவு வழங்குவோருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்கினங்களுக்கு தேவையற்ற வகையில் உணவு வகைகளை வழங்கும் பார்வையாளர்களுக்கு அபராதம் விதிக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மிருகங்களை பராமரிப்போர் பல சந்தர்ப்பங்களில் பார்வையாளர்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனினும், சில பார்வையாளர்கள் இந்த அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து பொழுது போக்கிற்காக பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் மிருகங்களுக்கு உணவு வகைகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு உணவு வழங்குவதனால் சில வகை விலங்கினங்கள் உயிராபத்தை எதிர்நோக்க நேரிடுவதாக மிருகங்களை பராமரிப்போர் தெரிவிக்கின்றனர்.
இதனால் எதிர்வரும் காலங்களில் மிருகக்காட்சி சாலையில் மிருகங்களை பார்வையிடச் செல்லுவோர் உணவு வகைகளை அனுமதியின்றி மிருகங்களுக்கு வழங்கினால் ஒரு தொகை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

நாளையும் விடுமுறை தினமாக அறிவிப்பு

Next Post

மோதல் காரணமாக தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு

Next Post

மோதல் காரணமாக தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures