Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 14 பேர் பலி..!

August 29, 2017
in News, World
0
எகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 14 பேர் பலி..!

எகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 32 பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே வந்த லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என அஞ்சப்படுகிறது. படுமோசமான சாலைகளால் எகிப்து நாட்டில் சாலை விபத்துகள் மிக அதிகமாக உள்ளது என்றும் இதனால் ஆண்டுதோறும் சுமார் 12 ஆயிரம் மக்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருவதாகவும் உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஊதிய விகிதாசாரங்களை வெளிப்படுத்த பிரித்தானியாவில் புதிய சட்டம்

Next Post

மொயீன் அலி, வோக்ஸ் அபாரம் சமன் செய்யுமா வெ.இண்டீஸ்

Next Post
மொயீன் அலி, வோக்ஸ் அபாரம் சமன் செய்யுமா வெ.இண்டீஸ்

மொயீன் அலி, வோக்ஸ் அபாரம் சமன் செய்யுமா வெ.இண்டீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures