கிளிநொச்சியை சேர்ந்த 46 வயதான தமிழ்ப் பெண்ணுக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்யப்பட்ட சம்பவமொன்று கண்டி வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது.
விபத்தொன்றில் சிக்கி மூளைச் சாவு நிலையிலிருந்த 19 வயதான சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம் 46 வயது தமிழ்ப் பெண்ணுக்கு மாற்றீடு செய்யப்பட்டுள்ளது.
பதுளை மஹியங்கனை வீதியைச் சேர்ந்த வை.கே.லக்ஷன் புரமோத்யா எனும் இந்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வீதி விபத்தொன்றில் சிக்கியதால் அவர் மூளைச் சாவு நிலையிலுள்ளார்.
இந்த நிலையில் அவரது பெற்றோரின் சம்மதத்துடன் அகற்றப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று கிளிநொச்சியைச் சேர்ந்த 46 வயது தமிழ்ப் பெண்ணுக்கும் மற்ற சிறுநீரகம் குருநாகல் மல்சிரிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது ஆணுக்கும் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

