வடக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் பொறியியலாளர்களுக்கு என 18 வெற்றிடங்கள் உள்ளன. 15 பேர் ஒப்பந்த அடிப்படையில் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
அரசு அதற்குரியவர்களை நியமிக்கா மையே இதற்குக் காரணம் என்று வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் அலுவலகம் தெரிவித்தது. இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
வடக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் நிலவும்
18 பொறியியலார்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆளணி அனுமதி அரசிடமே உள்ளது.
பொறியியலாளர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கான அதிகாரமும், பொறுப்பும் கொழும்பு அரசிடமே உள்ளது எனவே நாம் ஒப்பந்த அடிப்படையில் பொறியியலாளர்களை நியமித்துள்ளோம்.
இவர்களின் ஒப்பந்தகால நீடிப்புத் தொடர்பாக 50ஆவது அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அதற்கான அனுமதிகிடைத்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் அவர்களை நியமித்துள்ளோம்.
மொத்தமாக காணப்படும் 18 பொறியியலாளர் வெற்றிடங்களுக்குத் தற்போது 15 பொறியியலார்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள னர்.
மாகாணத்திற்குவரும் பெருமளவுநிதியின் கீழான குடிசார் வேலைத்திட்டங்களை உரிய முறையில் முன்னெ டுப்பதற்கு ஏதுவாகவே பொறியியலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நிய மித்துள்ளோம் – என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.