Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ் – பொறு­மை­யி­ழந்த மாவை

August 14, 2017
in News, Politics
0
தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ்  – பொறு­மை­யி­ழந்த மாவை

ஈபி­ஆர்­எல்­எவ் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தானும் குழம்பி மக்­க ளை­யும் குழப்­பு­கின் றார் என்று கடு­மை­யா கச் சாடி அறிக்கை விட்­டி­ருக்­கின்­றார் தமிழ் அர­சுக் கட்­சி யின் தலை­வர் மாவை சோ. சேனா­தி­ராசா.
‘‘அவர் மக்­க­ளை­யும் குழப்­பு­கின்­றார். அவ ருக்கு தனது செய்­தி கள் பத்­தி­ரி­கை­க­ளில் வரா­விட்­டால் ‘மண்டை’ பிளந்து விடும்­போ­ லும். பொய்ச் செய்­தி க­ளா­யி­னும் அவ ருக்கு மகிழ்ச்­சி­தான்’’ என்று அவர் அந்த அறிக்­கை­யில் தெரி வித்­துள்­ளார்.

‘‘எங்கு கல்­லெ­றி­பட் டா­லும் பின் காலைத் தூக்­கும் பிரா­ணி­யாக எல்­லா­வற்­றுக்­கும் தமிழ் அர­சுக் கட்­சி­யையே வலிந்து குற்­றம் சாட்டி வரு­கி­றார்­கள்’’ என்று மிகக் கடு­மை­யா­கவு குறிப்­பிட்­டுள்­ளார்.
கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சாடும் போதெல்­லாம் பொது­வா­கப் பொறு­மை­யாக இருப்­பதே மாவை சேனா­தி­ரா­வின் பழக்­கம். எனி­னும் அது கட்­டு­மீ­றிச் சென்­றுள்­ளதை அடுத்­துப் பொறு­மை­யி­ழந்­துள்ள அவர், அண்­மை­யில் புளொட்­டுக்கு எதி­ரா­க­வும் தற்­போது ஈபி­ஆர்­எல்­எவ்­வுக்கு எதி­ரா­க­வும் கடு­மை­யான விமர்­சன அறிக்­கை­களை விடுத்­துள்­ளார்.

அவ­ரது அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,
சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் இது­வரை இரா.சம்­பந்­தன், எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரைத் திட்­டித் தீர்த்து வந்­தார். இப்­போது என்­னைத் திட்ட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்.

வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் ஐந்து கட்­சி­க­ளும் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ருக்கு ஒரு வாக்கை மக்­கள் அளிப்­ப­தற்கு வேலை செய்ய வேண்­டும் எனத் தீர்­மா­னித்­தோம். அவ்­வாறே தீவி­ர­மா­கச் செய­லாற்­றி­னோம். அப்­போது சுரேஸ் எவ்­வாறு நடந்து கொண்­டார் என்­பதை அவர் மறந்­தி­ருக்­கக்­கூ­டும்.

வடக்கு மாகாண சபை­யில் பொ.ஐங்­க­ர­நே­சன் அமைச்­ச­ருக்கு எதி­ராக ஊழல் குற்ற விசா­ரணை நடத்த வேண்­டு­மென்று தீர்­மா­னம் கொண்டு வர­வேண்­டு­மென்­ற­வர் புளொட் அமைப்­பின் உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தன். அதன் பின்­னர் அனைத்து ஊழ­லுக்கு எதி­ரா­க­வும் சட்­ட­பூர்­வ­மான சுதந்­தி­ர­மான விசா­ரணை நடத்­த­வேண்­டு­மென்று தமிழ் அர­சுக் கட்சி உறுப்­பி­னர் அ.பரஞ்­சோதி தீர்­மா­னம் கொண்டு வந்­தார். அது இப்­பொ­ழு­தும் இருக்­கி­றது. ஆனால், தமிழ் அர­சுக் கட்சி ஊழலை ஆத­ரிக்­கி­றது என்று பொய்ப் பரப்­புரை மேற்­கொள்­ளப்­பட்­டது.

மூவர் அடங்­கிய விசா­ர­ணைக்­கு­ழுவை நிய­மித்த முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்த அறிக்­கை­யின்­படி நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. நெருக்­கடி வந்த பின் அந்த அறிக்­கையை சபை­யில் வைத்து பிர­ப­ல­மாக்­கி­னார். அது­தான் பிரச்­ச­னை­யின் ஆரம்­பம்.

பின்­ன­ரும் அந்­தக் குழு­வின் பரிந்­து­ரை­யின்­படி செயற்­ப­ட­வில்லை. மாகாண சபை­யில் உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக்­களை அறிந்த பின் அமைச்­சர்­கள் தொடர்­பில் நாம் தீர்­மா­னிப்­போம் என்று கூறிய முத­ல­மைச்­சர், அதற்கு மாறா­கச் செயற்­பட்­ட­மை­யி­னால்­தான் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வரை­யி­லான பிரச்­சினை ஏற்­பட்­டது. இதனை அவ­ரி­டமே நான் கூறி­யுள்­ளேன். அதற்கு அவர் தந்த பதில் ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது.

முத­ல­மைச்­சர் இல்­லத்­தில் கடந்த 5ஆம் திகதி நடந்த கூட்­டத்­தில், சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன் முன்­னாள் அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் அவ­ரது குடும்­பத்­தி­னரை வலிந்து இழுத்து அவர்­கள் ஊழல் செய்­த­னர் என்­றும் அதற்கு ஆதா­ரங்­கள் உண்டு என்­றும் வாதிட்­டுக் கொண்­டி­ருந்­தார். உண்­மைக்கு மாறான இந்­தப் பேச்சை முத­ல­மைச்­சர் ஆத­ரித்­தார்.

திரு­மதி அனந்தி சசி­த­ரனை அமைச்­ச­ரா­கத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் நிய­மித்­தார் என்று முத­ல­மைச்­சர் கூறி­னார். அப்­பொ­ழு­தும் அவரை நீக்­கும்­படி நாம் கோர­வில்லை. அவர் மீது இருந்த ஒழுங்கு நட­வ­டிக்கை பற்­றியே கூறி­யி­ருந்­தேன். அவ­ரைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­ய­தா­கக் கடி­தம் தாருங்­கள் என்று கேட்­டுப் புதிய ஓர் அர­சி­யல் பிரச்­சி­னையை முதல்­வர் உரு­வாக்­கி­னார்.

இனத்­தின் ஒற்­று­மைக்­காக அமைச்­சுப் பத­வி­க­ளுக்­குப் போட்­டி­யி­டா­மல் முத­ல­மைச்­சர் விரும்­பி­ய­வாறு சுமு­க­மாக வினைத்­தி­ற­னு­டன் அமைச்­ச­ர­வையை அமைக்­க­வும், மாகாண சபையை நெருக்­க­டி­யின்றி நிர்­வ­கிக்­க­வும், இனப்­பி­ரச்­சனை மற்­றும் ஏனைய பிரச்­ச­னை­க­ளின் தீர்­வுக்­காக அனை­வ­ரும் ஒன்­று­பட்­டுச் செயல்­ப­ட­வும் தமிழ் அர­சுக் கட்சி மாகாண சபை உறுப்­பி­னர்­கள் உறு­தி­ப­டக் கருத்தை முன்­வைத்­தி­ருக்­கி­றார்­கள்.
ஆனால் எங்கு கல்­லெ­றி­பட்­டா­லும் பின் காலைத் தூக்­கும் பிரா­ணி­யா­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யையே வலிந்து குற்­றம் சாட்டி வரு­கி­றார்­கள். இது அவர்­கள் பழக்க சுபா­வம்.

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் பத­விக்கு போட்­டி­யிட்டு அடி­ப­டா­மல், முத­ல­மைச்­ச­ரின் விருப்­பத்­தின்­படி அமைச்­சர்­களை நிய­மிப்­ப­தற்­குத் தமிழ் அர­சுக் கட்சி உறுப்­பி­னர்­கள் வழி­ச­மைத்து விட்­டார்­கள் என்­பதை சுரே­ஸி­னால் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை. கல­கம் ஏற்­ப­டுத்த முனை­கின்­றார்.

கூட்­ட­மைப்­புத் தலை­மையை அகற்­ற­வேண்­டும் என்­றார். தலை­மைப் பொறுப்பை முத­ல­மைச்­சரை ஏற்­கு­மாறு தொடர்ந்து பேசி­னார். அறிக்கை விட்­டார். முத­ல­மைச்­சர் அதில் எடு­பட்­டார் போன்று தெரி­ய­வில்லை. சுரே­ஸூக்கு அது எரிச்­ச­லாக இருக்­கி­றது.

வட மாகா­ண­ச­பை­யில் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளையே தொடர்ந்­தும் அறிக்­கை­களை விடுத்­துக் குழப்­பிக் கொண்­டி­ரா­மல் ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளைக் கொண்டு முத­ல­மைச்­சர் மாகாண சபையை நடத்­திச் செல்ல இடம் விடு­வ­து­தான் இன்று பொருத்­த­மான செய­லா­கும் – என்­றுள்­ளது.

Previous Post

கரித்துண்டுகளால் சுவரோவியம் வரையும் பெயர் தெரியாத கலைஞர்!

Next Post

தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

Next Post
தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி  பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures