Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவு

June 12, 2017
in News
0

பிரிந்து செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை இணைப்பதற்கான அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் முதலில் சசிகலா தலைமையிலும் பின்னர், தினகரன் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வந்தது.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி, ‘சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைப்போம்’ என்று கூறினார்.

இதனால் தினகரன் தலைமையில் இருந்த இரண்டாவது அணிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இதையடுத்து பிரிந்து கிடந்த இரண்டு அணிகள் இணைப்பதற்காக இரு அணிகளிலும் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.

ஓ.பி.எஸ் அணியினர், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக விலக்கிவைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இணைப்பு குறித்து பேசுவோம்’ என்று கூறினர்.

ஆனால், இதற்கான நடவடிக்கைகள் முடங்கியதை அடுத்து இரு அணிகளின் இணைப்பு இழுபறியான நிலையில் இருந்தது. இந்நிலையில்தான் பன்னீர்செல்வம் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பதற்கான அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியில் உருவாக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது.

இரு அணிகள் இணைப்பு தேவையில்லை என மக்கள் நினைக்கின்றனர். எனவே மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுகிறது என்றார். மட்டுமின்றி தமிழகத்தில் தற்போது மிகவும் மோசமான முறையில் ஆட்சி நடந்து வருகிறது.’ என்றும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

சசிகலாவுடன் சேர்ந்து தீபக் ஜெயலலிதாவை கொன்றுவிட்டார்: தீபா பரபரப்பு பேட்டி

Next Post

தீவிரவாதிகளை கண்டுபிடிக்க புதிய திட்டம்: ஜேர்மனியில் முதன் முதலாக அறிமுகம்

Next Post

தீவிரவாதிகளை கண்டுபிடிக்க புதிய திட்டம்: ஜேர்மனியில் முதன் முதலாக அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures