Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்? இரத்தக் கறையுடன் மார்க்கெட்டிற்குள் நுழைந்த சம்பவம்

June 4, 2017
in News
0

லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 3 கொலையாளிகளை பொலிசார் சுட்டு கொன்றுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது வேன் ஏற்றியும், போரக் மார்க்கெட் பகுதியில் கத்தியால் குத்தியும் நேற்றிரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், 6 பேர் கொல்லப்பட்டதுடன் 3 கொலையாளிகளை பொலிசார் சுட்டு கொன்றுள்ளனர்.

30க்கும் மேற்பட்டோர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. காயமடைந்தவர்களை மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் லண்டன் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர ஆலோசனை கூட்டத்திற்கும் அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலாம் இணைப்பு

பிரித்தானியாவின் லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்ததுள்ளதுடன், ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள பிரிட்ஜ் ஸ்டேசனில் சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10 மணி அளவில் வெள்ளை நிற வேன் ஒன்று அங்கு நடைபாதையில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது வந்த தகவலில் படி வேனில் ஐந்து தீவிரவாதிகள் இருந்ததாகவும், அவர்கள் மக்கள் மீது மோதியவுடன் வேனில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்த மக்கள் மீது அவர்கள் வைத்திருந்த கத்தியை வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்த சிலரின் தொண்டைய பிளேடால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொடூர சம்பவத்தால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தற்போது வரை 7-பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒருவர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்த உடனடியாக Borough Market பகுதியில் கத்தியில் இரத்தக்கறையுடன் அங்கு நுழைந்ததாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் துப்பாக்கி சூட்டை நடத்தி அங்கிருந்த மக்களை உடனடியாக கிழே படுக்கும் படி கூறியுள்ளனர்.

இதனால் பெரிதும் பதற்றம் அடைந்த மக்கள் உயிருக்கு பயந்து தங்களுடைய மேஜைக்கு கீழே படுத்தனர். ஆனால் தீவிரவாதிகள் தப்பித்துவிட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அங்கு சென்ற தீவிரவாதிகள் யாரேனையும் தாக்கியுள்ளனரா, காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து அங்குள்ள Vauxhall பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் வந்ததால் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் மற்றும் Borough Market பகுதியில் நடந்த இரண்டு சம்பவங்களுமே தீவிரவாதிகளின் செயலாகத்தான் இருக்கும் என்று பொலிசார் உறுதிபட கூறியுள்ளனர்.

முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல
advertisement
Tags: Featured
Previous Post

பிரித்தானியாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்? மக்கள் மீது தாறுமாறாக மோதிய வாகனம்

Next Post

அல்பேர்ட்டாவில் சூறாவளி!

Next Post
அல்பேர்ட்டாவில் சூறாவளி!

அல்பேர்ட்டாவில் சூறாவளி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures