Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

  களத்தில் இறங்கிய மகிந்த, மைத்திரி குடும்பம்!

June 4, 2017
in News
0
  களத்தில் இறங்கிய மகிந்த, மைத்திரி குடும்பம்!

இலங்கை அரசியலில் இரு குடும்பங்கள் ஆட்சி அதிகாரங்களில் கோலோச்சிவரும் ஒரு சூழல் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்தனர். குறிப்பாக சகோதரர்கள், மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் என்று அனைவரும் முக்கியமான அரசு பொறுப்புக்களில் இருந்தனர்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு, நிதி, முப்படைத் தளபதியாகவும் இருக்க, நிதியமைச்சராக பசில் ராஜபக்சவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்சவும், சமல் ராஜபக்ச சபாநாயகராகவும், நாமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், யோசித கடற்படையிலும் இருந்தனர்.

இதனால் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி மீது, சர்வதேசத்தில் மாத்திரமன்றி உள்நாட்டிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

மகிந்த ஆட்சியினை வீழ்த்தவும் இந்த குடும்ப ஆட்சி என்னும் கோசம் மிக எளிமையாகவும், பக்கபலமாகவும் மைத்திரி, ரணில் தரப்பினருக்கு வாய்ப்பாகியது.

ஆனால், மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் குடும்ப ஆட்சி இருக்காது என்றும், ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் எதிர் பார்க்கப்பட்டது. ஆயினும் ஆட்சி ஏற்று சிறிது காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிக்கா சிறிசேன அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டதுடன், ஜனாதிபதி பங்குபற்றும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி பங்குபற்ற முடியாத நிகழ்வுகளில் கூட அவர் கலந்து கொண்டார். இதேவேளை ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனவும் அரசியலில் ஈடுபாடு காட்டியிருந்தார். இதற்கு ஒரு படிமேல் சென்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் நிகழ்வுகளில் கூட ஜனாதிபதியோடு கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில். இந்தச் செயற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. மகிந்தவின் ஆட்சியை மைத்திரி தொடர்கின்றார் என்றும், குடும்ப ஆட்சி மீண்டும் நல்லாட்சியிலும் தலை தூக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த நிலையில், குடும்ப ஆட்சி என்னும் பெயர் கொண்டு வீழ்த்தப்பட்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியையும், இழந்த மக்கள் செல்வாக்கையும் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

b - Copy bb - Copy

bbb - Copy bbbb - Copy bbbbb - Copy   bbbbbbb

bbbbbbbb bbbbbbbbb bbbbbbbbbb bbbbbbbbbbb bbbbbbbbbbbb bbbbbbbbbbbbb

bbbbbbbbbbbbbbbbbbbb

குறிப்பாக கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பதும், விகாரைகளுக்கு அடிக்கடிச் சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டு வர, அவரின் புதல்வர்கள் மூவரும் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி வேலை செய்தனர். அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் அண்மையில் பெய்த கடும் மழையும், தென்னிலங்கையின் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி 7 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதோடு, 224 பேர் உயிரிழந்துள்ளனர்.

வரலாறு காணாத கனமழையினால் தென்னிலங்கையின் 12 மாவட்டங்கள் வெள்ளக்காடாகியது. மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கு பல்வேறு நாடுகளும் உதவி செய்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் மகிந்த ராஜபக்ச உட்பட, அவரின் புதல்வர்களாகிய நாமல். யோசித ரோகித, மனைவி சிரந்தி ராஜபக்ச உட்பட அனைவரும் களத்தில் இறங்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தனர். இது குறித்ததான புகைப்படங்கள், காணொளிகள் என்பன வெளிவந்திருந்தன.

அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளும், மகனும் களத்தில் இறங்கி பணியாற்றினர். இது மக்களுக்கு உதவும் ஒரு நோக்கம் என்றாலும், இதிலும் அரசியல் இருக்கிறது என்றும், ஆட்சியையும், அதிகாரத்தையும் மக்கள் செல்வாக்கினையும் பெறுவதற்காக குடும்பமாக தலைவர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்று அரசியல் தரப்பினர் கருதுகின்றனர்.

எதுவாயினும், இலங்கை அரசியலில் இரு குடும்பங்கள் தனித்துச் செயற்படத் தொடங்கியிருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Tags: Featured
Previous Post

இலங்கையில் அமெரிக்க இராணுவம்!

Next Post

முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தலைமையக முகாமை ஊடறுத்து நந்திக்கடலுக்கு புதிய பாதை

Next Post
முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தலைமையக முகாமை ஊடறுத்து நந்திக்கடலுக்கு புதிய பாதை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தலைமையக முகாமை ஊடறுத்து நந்திக்கடலுக்கு புதிய பாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures