Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் போனோரை படையினர் கொன்றிருப்பர்! சந்திரிகா

June 2, 2017
in News
0
காணாமல் போனோரை படையினர் கொன்றிருப்பர்! சந்திரிகா

தமிழர் தாயகப் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்ற பெற்றோர், அந்த இரகசிய இடம் தொடர் பில் தெரிவிக்கப்படும் தகவலை ஜனாதிபதியிடம் வழங்குவதாக குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, காணாமல் போனவர்களை இராணுவத்தினர் பொறுப்பேற்றிருந்தால் அப்போதைய சூழலில் அவர்களை கொன்றிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி அவர்களது பெற்றோர் கிளிநொச்சியில் 100வது நாளாக நேற்று முன்தினம் பாரிய போராட்டத்தை நடத்தியிருக்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி இந்த தகவலை சர்வதேச ஊடகமொன்றுடன் நடத்திய விசேட நேர்காணலின்போது வெளி யிட்டார்.

திருகோணமலை-மூதூர் பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் மத்தியில் உரையாற்றியபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்னும் குறிப்பிட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற பெற்றோரை அந்த இடத்திற்குச் சென்று ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோருடன் தானும் அவ்விடத்திற்குச் சென்று ஆராய்ந்து பார்ப்பதற்குத் தயார் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.இந்த நிலையில் தேசிய நல்லிணக்கச் செயலணியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க, சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று நேர்காணலை வழங்கினார்.

அதில் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடுகையில்,

அவர்களுடைய பிள்ளைகளும், கணவன்மார்களும் இராணுவத்தினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அப்படி அவர்கள் இருந்தால் தயவு செய்து அதனை தெரிவியுங்கள், அவ்வாறு தெரிவிக்கும் இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச்செல்ல தானும் வரத்தயார் என்பதை அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

விசாரணை நடத்தி தேடுவதற்கும் பெற்றோருக்கு சந்தர்ப்பத்தை அளிக்கவும் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். எனவே அந்த இடத்தில் அமர்ந்திருப்பதை விடவும் குறித்த இடங்களுக்குச் சென்று ஆராய்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதனை மற்றவர்கள் கூறுவதற்கு பயப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கி ன்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதை தேடிப்பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்த வகையில் அப்படி யாரையும் முகாம்களில் மறைத்து வைக்கவில்லை.

அப்போது ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்த இராணுவத்தின் பழக்கத்திற்கேற்ப அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால் அப்போது அவர்களை பொறுப்பேற்றிருந்தால் யாரையும் கொலை செய்வார்களே அன்றி, இவ்வளவு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தயா ரென்றால், ஜனாதிபதியும் அதற்கு இணங்கினால் நானும் இதற்கு உதவிபுரிவேன். ஜனாதிபதி அப்படியான அறிவிப்பொன்றை விடுத்தார். அதற்குப் பின்னர் இதுகுறித்து நான் அவரிடம் வினவவில்லை. ஆனாலும் ஜனாதிபதி பொய்யை கூறவில்லை. ஜனாதிபதி உண்மையாகவே அதனை தெரிவித்தார்.

இருந்த போதிலும் முடியாது என்று ஜனாதிபதி தெரிவிக்காத பட்சத்தில் அவர்கள் தயாரென்றால் அவர்களை எந்த இடத்திற்கும் அழைத்துச்செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென அவர்கள் கோரினால் அவர்களை நாங்கள் அழைத்துச்செல்வோம். எனது கருத்தை நான் உண்மையாக கூறுகிறேன்.

அதனை தெரிவிக்க அநேக சிங்களவர்களுக்கு அச்சம் உள்ளது. அவர்கள் இன்னும் உயிருடன் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும். யுத்தநேரத்தில் இவர்களை அழைத்து, இற்றைக்கு 9 வருடங்களாக அவர்களை வைத்துக்கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்றார்.

அப்படியென்றால் அரசாங்கம் நேர்மையாக உள்ளது என நினைத்தால் இவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் இல்லை என்றும் பட்டியலிட்டு வெளியிடலாம்தானே? என்று செய்தியாளரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசாங்கத்திற்கு அதனை கூறமுடியாது. இராணுவமே அதனை அறிவிக்கவேண்டும். அவர்களே இல்லை என்று கூறுகின்றனர்.

இந்த அரசாங்கத்திற்கு அதனைக்கூற முடியாது. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரிவிக்கமுடியும். எனவேதான் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைத்து அவர்க@டாக யார் காணாமல் போனவர்கள் என்பதை ஆராய வேண்டும்.

ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 3 ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. எல். எல்.ஆர்.சி, பரணகம ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு என்பன அமைக்கப்பட்டன. அவர்களும் பல பட்டியல்களைத் தயாரித்துள்ளனர்.

எனினும் இந்தப் பட்டியர்கள் முழுமைப்பெறவில்லை என்று தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால்தான் இந்த அலுவலகத்தை அமைப்பதாக சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டது.

அந்த பட்டியலையும் பெற்று இன்னும் சிலர் இருந்தால் அவர்களையும் உள்ளடக்கி முழுமைப்படுத்தி விசாரணை செய்து, கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, காணாமல்போனோர் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை தயாரித்து அதற்கும் முன்னர் நட்டஈடு தொடர்பிலும் தயாரிக்க வேண்டும்.

அதனை செய்த இராணுவச் சிப்பாய்களை இழுத்துச்சென்று கொல்வதைப் பார்க்கிலும் அவர்கள் வாழ்வதே முக்கியமாகும். அவர்கள் வாழ்வதற்குத் தேவையான வசதிகளை செய்வதோடு பாரிய குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கே அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

முதலாவது பட்டியல் செய்து அதன் பின்னர் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்து அதன் பிறகு உண்மையைக் கண்டறியும் பொறிமுறை அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று சந்திரிகா தனது நேர்காணலில் குறிப்பிட்டார்

Tags: Featured
Previous Post

நோவ ஸ்கோசியாவில் மீண்டும் லிபரல் ஆட்சி!

Next Post

இலங்கையில் மெல்ல மெல்ல நகரும் கைதுகள், சித்திரவதைகள்!

Next Post
இலங்கையில் மெல்ல மெல்ல நகரும் கைதுகள், சித்திரவதைகள்!

இலங்கையில் மெல்ல மெல்ல நகரும் கைதுகள், சித்திரவதைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures