Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காட்டில் கிடைக்கும் எலும்புக் கூடுகள் : விடுதலைப் புலிகள் தாக்கப்போகின்றார்கள் என எச்சரிக்கும் இராணுவம்?

April 9, 2017
in News
0
காட்டில் கிடைக்கும் எலும்புக் கூடுகள் : விடுதலைப் புலிகள் தாக்கப்போகின்றார்கள் என எச்சரிக்கும் இராணுவம்?

யுத்தம் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்தோடிவிட்ட நிலையிலும் இன்றும் (சிங்கள) மக்களிடையே அதனை நினைவு படுத்தும் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.

யுத்த காலத்தில் எப்படி விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்பது குறித்து இராணுவத்தினர் மக்களிடையே விபரிக்கும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த காணொளியில் யுத்தம் பற்றியும், இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இராணுவ வீரர் ஒருவர் விபரிக்கின்றார். காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்

மேலும் அவர் அதில் கூறியுள்ளதாவது,

ஆணையிறவு தாக்குதலின் போது 2800 இற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அது இலங்கை யுத்த வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம்.

விடுதலைப்புலிகள் குண்டு தாக்காத வகையில் தமது வாகனத்தை செய்து இருந்தார்கள். அதன் மூலம் தொடர்ந்து முன்னேறி வந்து இராணுவ வீரர்களை கொன்று குவித்தார்கள்.

தற்கொலை தாக்குதல் பலவற்றையும் புலிகள் மேற்கொண்டார்கள். அவர்களுடன் யுத்தம் செய்து உயிர்த் தியாகங்களை செய்து நாட்டிற்கு சேவை செய்தவர்கள் இராணுவ வீரர்கள்.

ஆனால் உங்களுக்கு யுத்த மனநிலை குறித்து பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தலதா மாளிகைக்கு தாக்குதல் மேற்கொண்டு அழித்தபோதே நாடு முழுவதற்கும் புலிகள் பற்றி தெரிய வந்தது.

இராணுவத்தில் சேர்ந்த தமது பிள்ளைகளை காணவில்லை என பூஜை வழிபாடுகளை தாய்மார்கள் தலதா மாளிகையில் இன்றும் மேற்கொள்ளுகின்றார்கள்.

யுத்தத்தில் இறந்த படை வீரர்கள் அனைவரது உடல்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது இல்லை. இப்போது கூட காடுகளுக்கு நாம் செல்லும் போது எழுப்புக் கூடுகள் எமக்கு கிடைக்கின்றன. அவை இறந்த படை வீரர்களுடையது.

விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் யுத்தம் செய்து காத்தவர்கள் நாம். இன்று எழும்புக்கூடுகளாக கிடைக்கின்றனர், போரில் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர்.

சிறந்ததொரு இராணுவம், நாட்டுக்காக உழைக்கும் இராணுவ வீரர்கள் உள்ளார்கள். ஆகவே வெளிநாடுகளில் இருந்து எதிரிகள் யாரும் இனி வருவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.

செனல் 4 போன்றவற்றைப் பார்த்து மீண்டும் எதிகள் வந்தாலோ அல்லது விடுதலைப்புலிகள் நாட்டுக்குள் வந்தாலோ உங்களை காக்க நாம் இருக்கின்றோம். எனவும் அந்த வீரர் பொது மக்களிடம் தெரிவிக்கின்றார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் விடுதலைப்புலிகள் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

மீண்டும் புலிகள் வந்தால் காப்போம் என அவர் பொது மக்களிடம் தெரிவிப்பதற்கு காரணம் என்ன? மீண்டும் புலிகள் தாக்குவார்கள் என எச்சரிக்கை செய்கின்றார்களா?

போன்ற கேள்விகள் இந்த காணொளியின் காரணமாக எழுப்பப்பட்டுள்ளதான தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவது சாத்தியமற்றது. எப்போதும் மக்களை பீதியில் வைப்பதற்காக இப்படி செய்யப்படுகின்றதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை அரசிற்கு எதிரானவர்கள் விடுதலைப்புலிகள் மீண்டும் வருகிறார்கள் என தெரிவித்து வருகின்ற போதும் இராணுவ உயர் மட்டங்கள் அதனை மறுத்து வருகின்றதோடு, நாட்டின் பாதுகாப்புக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இராணுவ வீரர்கள் மக்களிடம் இவ்வாறான கருத்துகளைப் பரப்பி வருவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும், அரசு இது தொடர்பில் கவனம் செலுத்துமா? எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

சிறிலங்காவின் போர்களம் ஐ.நா மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளது – ச.வி. கிருபாகரன்

Next Post

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

Next Post
இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures