Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேலையற்ற பட்டதாரிகளுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! வடக்கு மாகாண முதலமைச்சர்

March 26, 2017
in News
0

வேலையற்ற பட்டதாரிகளுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! வடக்கு மாகாண முதலமைச்சர்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு சராசரியாக 35 வயதை எட்டிய நிலையில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் வேலையற்ற பட்டதாரிகளுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சந்திப்பின் போது வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் 6 பிரதிநிதிகள் என்னுடன் தமது பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அவர்கள் தமது படிப்பை முடித்த பின் பல வருடங்களாக வேலையற்ற பட்டதாரிகளாகவிருப்பதாகவும் சராசரியாக 35 வயதை எட்டிய நிலையில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை எடுத்துக்கூறினார்கள்.

அடுத்த மாணவத்தலைமுறையினர் தாம் வேலையற்றிருப்பதைப்பார்த்து படிப்பதைத் தொடராது புறக்கணிக்கும் நிலை ஏற்படக்கூடுமெனவும் கூறினார்கள்.

எமக்குக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி தற்பொழுது வெற்றிடங்கள் 1051 ஆகவிருப்பதையெடுத்துக்காட்டி அவற்றை நிரப்ப நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறினேன்.

அவற்றில் பல வெற்றிடயங்கள் கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானவை. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பட்டதாரிகளில் அவ்வாறானவர்கள் மிகக் குறைவே என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதன் பொருட்டு அவர்களை வேறு துறைகளில் ஈடுபடுத்துவது பற்றியும் பேசப்பட்டது.

சுற்றுலாத்துறை, தொழில்முயற்சிகள், ஆடைத்தொழில்நிறுவனங்களில் முகாமைத்துவத்தரப்பயிற்சி, பொலிஸ் திணைக்களத்தில் உதவி அத்தியட்சகர் தரப்பதவிகள் போன்றவற்றில் வெற்றிடங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அவர்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வடமாகாண வெற்றிடங்கள் சுமார் 2000 அளவில் இருப்பதாகக் கூறினார்கள். அவை பற்றி ஆளுநர் ஊடாக அறிந்து கொள்ள முடியும் எனக் கூறினேன்.

தொண்டர் ஆசிரியர் சம்பந்தமாக சில விடயங்களைக் குறிப்பிட்டார்கள்.

வருடாவருடம் தொண்டர் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும் அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்ததாகவும் அவர்கள் வேலையை தம்மாலும் ஏற்றுக்கொள்ளமுடியும் எனவும் கூறினார்கள்.

எக்காலத்திலிருந்து கற்பித்த தொண்டர் ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய மத்திய அரசாங்க சுற்றுநிரூபம் இருப்பதையெடுத்துக்கூறி பட்டதாரிகள் அவ் வெற்றிடங்கள் ஏற்படின் அவற்றை நிரப்பமுடியாதென அறிவித்தேன்.

தொண்டர் ஆசிரியர் கல்வித் தகைமை க.பொ.த சாதாரண அல்லது உயர் தரமே அன்றிப் பட்டப்படிப்பல்ல என்பதை எடுத்துக் கூறினேன்.

அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தமாகவும் அதேபதில் வழங்கப்பட்டது. அதாவது அப்பதவிகளுக்கு பட்டதாரிகளை நியமித்தால் குறைந்த கல்வித்தகைமைகளை உடையவர்களுக்கு வேலைவாய்ப்பில்லாமல் போகும் என்பதை தெரிவித்தேன்.

கடைசியாக அத்தனை வேலையற்ற பட்டதாரிகளின் சுய விபரங்களையும் ஆண்டு ரீதியாக கற்ற பாடங்களின் அடிப்படையில் பட்டியலாகத் தயாரித்து 28.03.2017க்கு முன் அனுப்பிவைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன்.

அத்துடன் அரசாங்க உத்தியோகங்கள் கிடைக்காதவர்களுக்கு தனியார்துறையில் வேலையில் சேர்வது பற்றி அவர்களின் விருப்புகளைத் தருமாறும் கோரினேன்.

அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தரவுகளை வைத்து கொழும்பு செல்லும் போது நான் இவைபற்றி உரிய அமைச்சருடன் பேசுவதாக அவர்களுக்குத் தெரிவித்தேன் எனவும் கூட்டம் சுமூகமாக முடிவுற்றது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

இழுத்தடிக்கப்பட்டு வரும் இலங்கையின் போர்க்குற்றங்கள்

Next Post

பிரபாகரனை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்த அமெரிக்கா! நிராகரித்த இலங்கை, தமிழக தமிழ் தலைவர்கள்..

Next Post
பிரபாகரனை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்த அமெரிக்கா! நிராகரித்த இலங்கை, தமிழக தமிழ் தலைவர்கள்..

பிரபாகரனை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்த அமெரிக்கா! நிராகரித்த இலங்கை, தமிழக தமிழ் தலைவர்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026

Recent News

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures