Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசாவுக்காக திருமணம் செய்து கொண்ட மாணவன்: தக்க பதிலடி கொடுத்த பெண்

January 28, 2017
in News
0
விசாவுக்காக திருமணம் செய்து கொண்ட மாணவன்: தக்க பதிலடி கொடுத்த பெண்

விசாவுக்காக திருமணம் செய்து கொண்ட மாணவன்: தக்க பதிலடி கொடுத்த பெண்

விசாவுக்காக தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட நபரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கு ஜீவனாம்ச தொகைகையும் நீதிமன்றத்தின் உதவியோடு பெற்றுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Mariam Khaliq என்ற பெண், பிரித்தானியா குடியுரிமையுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

விற்பனை அதிகாரியா பணியாற்ற வந்த இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளாவை சேர்ந்த Noushad என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Noushad MBA படிப்பிற்காக மாணவர்களுக்காக வழங்கப்படும் விசாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றுள்ளார்.

இவரது விசாக்காலம் 2 ஆண்டுகள் என்பதால் 2013 ஆம் ஆண்டோடு இவரது விசா கலாவதியாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தான் இவருக்கு, மரியாமின் அறிமுகம் கிடைத்துள்ளது.

தனது விசாவை நீட்டித்துக்கொள்ள வேறு வழி இல்லை என்பதால், மரியாதை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளார். ஆனால் நவ்சத் தன்னை உண்மையாக காதலிக்கிறார் என்று நம்பிய மரியாம், அவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு பின்னர், நமது திருமணத்தை பற்றி எனது பெற்றோரிடம் தெரிவித்து அவர்களிடம் சம்மதம் வாங்கிவிட்டு மீண்டும் பிரித்தானியாவுக்கு வருகிறேன்.

அதுவரை நீ காத்திரு என மரியாமிடம் கூறிவிட்டு நவ்சத் கேரளாவிற்கு சென்றுள்ளார். கேரளா சென்ற இவர், நாட்கள் செல்ல மரியாமிடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில், எனது பெற்றோர் நம்முடைய திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் என்னால் இங்கிலாந்து வரமுடியாது என்ற குறுஞ்செய்தியை மரியாமிற்கு அனுப்பியுள்ளார்.

இதில், சந்தேகம் அடைந்த மரியாம், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரின் உதவியுடன் நவ்சாத் குடும்பத்தை பற்றி அறிய ஆரம்பித்தார். அதன்படி 2015 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சென்ற அவர், நவ்சாத் வீட்டிலேயே சென்று தங்கியுள்ளார்.

மேலும், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரை நவ்சாத் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பது மரியாமிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், நவ்சாத்தின் பெற்றோர் மரியாதை தங்களது வீட்டில் தங்குவற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்து பிரித்தானியா திரும்பிய மரியாம், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இவருக்கு விவாகரத்து கிடைத்தது. மேலும் மரியாமிற்கு தேவையான தொகையை கொடுத்து விடுகிறோம் என நவ்சாத்தின் குடும்பத்தினர் கூறியதால், தனக்கு வேண்டிய தொகையை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார்.

இதுகுறித்து நவ்சாத் கூறியதாவது, நான் படிப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றேன். அங்கு எனது விசாக்காலம் முடிந்துவிட்டதால், மரியாமின் உதவியோடு அங்கு தங்குவதற்கு முடிவு செய்தேன்.

நான் அவருடன் சாதரணமாகத்தான் பழகினேன். ஆனால் அவர்தான் எங்களது உறவினை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை.

அதனால் தான், கேரளாவிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து திரும்பினேன் என கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

பன்னீர் செல்வத்துக்கு மிரட்டல்? திடீரென எம்பிக்கள் கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்ததற்கு காரணம் என்ன?

Next Post

அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி: என்ன தண்டனை தெரியுமா?

Next Post
அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி: என்ன தண்டனை தெரியுமா?

அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி: என்ன தண்டனை தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures