Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது: அடம் பிடிக்கும் அஞ்சலி சர்மா

January 28, 2017
in News
0
ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது: அடம் பிடிக்கும் அஞ்சலி சர்மா

ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது: அடம் பிடிக்கும் அஞ்சலி சர்மா

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வக்கீல் அஞ்சலி சர்மா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது . பின் இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞரான அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்,

அஞ்சலி தாக்கல் செய்த மனு அனுமதி பெறாமல் தாக்கல் செய்தது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த மனுவை உடனடியாக வாபஸ் பெறக்கோரி விலங்குகள் நல வாரிய செயலாளர் ரவிக்குமார் அஞ்சலிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அஞ்சலி சர்மா, தமிழக அரசின் அவசரச்சட்டத்தை எதிர்த்து நான் மனு தாக்கல் செய்யவில்லை, 2016ல் தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால மனுதான் அது.

இதை வாரியத்தின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யவில்லை, வாரிய செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக என்னை தடுக்காது. இருப்பினும் அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என அஞ்சலி சர்மா, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

மகிந்த வீட்டில் அரசு அமைச்சர்?? – பிளவுபடும் நாட்டை காக்க வெடிக்கும் புரட்சி..!!

Next Post

பன்னீர் செல்வத்துக்கு மிரட்டல்? திடீரென எம்பிக்கள் கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்ததற்கு காரணம் என்ன?

Next Post
பன்னீர் செல்வத்துக்கு மிரட்டல்? திடீரென எம்பிக்கள் கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்ததற்கு காரணம் என்ன?

பன்னீர் செல்வத்துக்கு மிரட்டல்? திடீரென எம்பிக்கள் கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்ததற்கு காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures