போதைக்காளான சாரதிகளை சோதிக்கும் மாதிரி திட்டம் ரொறொன்ரோவில் ஆரம்பம்.
கனடா-போதைக்களான சாரதிகளை சோதிக்கும் மாதிரித் திட்டத்தை ரொறொன்ரோ பொலிசார் நடை முறைப்படுத்துகின்றனர்.
திங்கள்கிழமை ரொறொன்ரோ பொலிசார் சாலையோர திரையிடல் சாதனங்களை பயன்படுத்தி போதைக்காளான சாரதிகளை கண்டறியும் சோதனையை ஆரம்பிக்கின்றனர்.
இம்மாதிரித்திட்டம் 2017 இலைதுளிர் காலம்வரை நடை முறைப் படுத்தப்படும்.ரொறொன்ரோ பொலிஸ் சேவைகளின் போக்குவரத்து பிரிவு, ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மற்றும் ஆர்சிஎம்பி அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும்.
மழை மற்றும் பனிபொழிவு போன்ற தொந்தளிப்பான கால நிலைகளில் மற்றும் இரவு நேரங்களில் இச்சாதனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதனை கண்டறிதல் இம்மாதிரித் திட்டத்தின் நோக்கமாகும்.
இச்சாதனங்கள் எதுவும் எந்தவித குற்றச்சாட்டுக்களையும் சுமத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரித்திட்டத்தின் போது சேகரிக்கப்படும் தகவல்கள் ஒரு போதும் கிரிமினல் மற்றும் நிர்வாக குற்றங்கள் போன்ற குற்ற வழக்குகள் தொடர ஆதாரங்களாக பயன்படுத்தப்பட மாட்டாதென கூறப்படுகின்றது.
ரொறொன்ரோ பொலிஸ் சேவையை சேர்ந்த ஐந்து அதிகாரிகள் அடுத்த 10-வாரங்கள் இடம்பெறும் சாதனை பரீட்சார்த்த நடவடிக்கைகளில் நியமிக்க பட்டுள்ளனர்.