ரெஜைனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மர்ம பொருள்
சஸ்காச்சுவான் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாவது மிகப்பெரிய நகரமுமான ரெஜைனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான மர்ம பொருளொன்று பொலிஸ் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்திற்கு சந்தேகத்திற்கு இடமான பொருளொன்று காணப்படுவதாக தகவல் வெளியானதை அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இந்த சம்பவத்தை அடுத்து விமானங்கள் தாமதிக்கப்பட்டதுடன், இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் விமான நிலையத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனை அடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த குண்டு செயலிழக்கும் பிரிவினர் சோதனைகளை முன்னெடுத்து, அங்கிருந்த சந்தேகத்திற்கிடமான பொருளை மீட்டு தூர இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 49 வயதுடைய ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.