Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

October 8, 2025
in News
0
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

மின் கட்டணத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே இலங்கை மின்சார சபையை நான்கு தொகுதிகளாக்குவததற்கான மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பொது மக்களிடம் கருத்து கோரல் இடம்பெற்று வருகிறது. எனினும் கட்டண திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின் கட்டணத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே இலங்கை மின்சார சபையை நான்கு தொகுதிகளாக்குவததற்கான மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் மின் கட்டணம் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இது குறித்து மக்கள் கருத்துக் கோரல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை ஆணைக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. எனவே மின் கட்டணம் குறைக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படுமா என்பதை தற்போது கூற முடியாது. முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை சார்ந்தவர்களின் கோரிக்கைகளுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்படும். எனவே தீர்மானம் எதுவாக இருந்தாலும், அது மின்சார ஊழியர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பாக அமையாது.

அரசாங்கத்தின் தீர்மானங்களை ஏற்க முடியாதவர்களுக்கு நாம் ஏற்கனவே சில தெரிவுகளை வழங்கியிருக்கின்றோம். எனவே அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் வேறு தொழிலை தேடிக் கொள்ளலாம் என்றார்.

Previous Post

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

Next Post

தம்பதியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Next Post
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

தம்பதியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures