Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

November 29, 2016
in Cinema, News
0
நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரத்குமார், ராதாரவி நீக்கம்தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது.

பின்னர் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

நடிகர் சங்க பொதுக்குழுவில் முன்னாள் நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்களை நிரந்தரமாக சங்கத்தில் இருந்து நீக்குவதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தில் முந்தைய நிர்வாகத்தால் பல்வேறு தவறுகள் நடந்துள்ளன. எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் வற்புறுத்தப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் செல்லும்இனிமேல் பொறுப்புக்கு வருபவர்களுக்கு இது ஒரு பயத்தை ஏற்படுத்தும். நடிகர் சங்க அறக்கட்டளையில் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் நிரந்தர உறுப்பினர்களாக நீடிக்க அவர்கள் பொறுப்பில் இருந்தபோது அறக்கட்டளை விதிமுறையில் மாற்றம் செய்துள்ளனர்.

5 பேர் தான் அறங்காவலர்களாக இருக்க முடியும் என்று விதியை திருத்தி உள்ளனர். அந்த விதிமுறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதற்கும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட வரவு–செலவு கணக்குகளுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. பொதுக்குழுவை லயோலா கல்லூரியில் இருந்து நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றியதற்கும் ஒப்புதல் பெறப்பட்டது. அனைத்து துறைகளில் இருந்தும் அனுமதி சான்றிதழ் பெற்று சட்டப்படியே இந்த பொதுக்குழு நடந்துள்ளது. எனவே இந்த பொதுக்குழு கூட்டம் செல்லும்.

போலீசில் புகார்சிலர் பொதுக்குழு கூட்டம் நடந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டனர். அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தனர். தடுத்தவர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். கருணாசின் காரை உடைத்துள்ளனர். அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும். நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துவிட்டு 67 பேர் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் முகவரிக்கு கடிதம் அனுப்பினாலும் திரும்பி வந்துவிடுகிறது.

எனவே அந்த 67 பேரையும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இன்றைய பொதுக்குழுவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

3 ஆண்டுக்குள் புதிய கட்டிடம்நடிகர் சங்க கட்டிடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கும். நாங்கள் பதவியில் இருக்கும் 3 வருட காலத்துக்குள் கட்டிடத்தை கட்டி முடிப்போம். தற்போது நடிகர் சங்கத்தில் ரூ.8.5 கோடி இருப்பில் உள்ளது.

நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு முன்னணி நடிகர்கள் வரவில்லையே என்று கேள்வி எழுப்பப்படுகிறது. நடிகர்கள் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கரண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிலர் வராதது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விஷால் ஆவேசம்முன்னதாக நடிகர் சங்க பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:–

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்ய உழைக்கிறோம். ஆனால் சிலர் அதற்கு இடையூறு செய்கிறார்கள். வழக்கு போடுகிறார்கள். நடிகர் சங்க நிலத்தை மீட்டது தவறா? புதிய கட்டிடம் கட்ட முயற்சிப்பது தவறா? என்னை பார்த்து, ‘நீ ஆம்பளையா?’ என்று கேட்டனர், ஆம்பளை என்பதால் தான் இந்த இடத்தில் நிற்கிறேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்றவர்களின் ஆத்மாக்கள் எங்களுடன் இருக்கிறது.

பழைய நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்தன. அதை தட்டிக் கேட்டோம். நடவடிக்கை எடுத்தோம். இதனால் காழ்ப்புணர்ச்சி காட்டுகிறார்கள். நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அறங்காவலர்களை அவர்களே நியமித்தனர். எனவேதான் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது.

யார் இடையூறு செய்தாலும், எந்த வகையில் தொல்லை கொடுத்தாலும் அதை எதிர்கொள்வேன். நடிகர்–நடிகைகள் தற்கொலையில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. நடிகர் சாய், நடிகை சபர்ணா ஆகியோர் சமீபத்தில் தற்கொலை செய்துள்ளனர்.

ஊழல் நடக்காதுநடிகர்–நடிகைகள் யாரும் இனிமேல் பலியாக கூடாது. என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நடிகர் சங்கத்துக்கு வாருங்கள். எங்களிடம் குறைகளை சொல்லுங்கள். உங்கள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.

நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறோம். கணக்கு–வழக்குகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. குண்டூசிக்கு செலவு செய்தாலும் கணக்கு எழுதுகிறோம். வீட்டில் இருந்துதான் சோறு கட்டி வருகிறோம். பேட்டா கிடையாது.

நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடக்காது என்று நான் உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துபொதுக்குழு கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு, தமிழ் திரைப்பட நூற்றாண்டு சம்பந்தமான வீடியோ ஒளிப்பரப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் ‘ஸ்கைப்’பில் வாழ்த்தினார்.

பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், விஜயகுமார், பிரபு, ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், பார்த்திபன், மன்சூர் அலிகான், விமல், மனோ பாலா, விஷ்ணு விஷால், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், தியாகு, விக்ரம் பிரபு, நடிகைகள் சுஹாசினி, அம்பிகா, சங்கீதா, கோவை சரளா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Previous Post

,நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு வந்தவர்கள் மோதல்: கருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு போலீசார் தடியடி; 20 பேர் கைது

Next Post

பயங்கர சண்டை காட்சிகளுடன் பல்கேரியாவின் பனிக்குகைகளில் அஜித் படப்பிடிப்பு

Next Post

பயங்கர சண்டை காட்சிகளுடன் பல்கேரியாவின் பனிக்குகைகளில் அஜித் படப்பிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures