Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலின் தொங்கு பாலத்திலிருந்து ராஜபக்ஷர்களே கரை சேர்ந்துள்ளனர் – சஜித் பிரேமதாச

March 9, 2024
in News
0
மஹிந்தவைப் போன்றே சஜித்தும் முட்டாள் தனமாக செயற்படுகின்றார் | விஜயதாச

தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘மக்கள் அரண்’ வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், யாப்பஹுவ தேர்தல் தொகுதியின் தலதாகம சந்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று சனிக்கிழமை (09)நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முழு நாடும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் மின்சாரக் கட்டணம் 500 – 600 சதவீதம் வரை அதிகரித்தது. நீர்க் கட்டணம் அதிகரித்து, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, வேலையிழப்பு அதிகரித்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இளைஞர்கள் வீதிக்கு இறங்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் காலத்தைப் போல நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சுமைகள் அதிகரித்து வரும் நிலைமையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பார்வையில் புதிய இயல்பு நிலையாக உள்ளது.

இன்று சில தரப்பினர் கோப்பு மூட்டைகளை காட்டி திருடர்களை பிடிக்க அதிகாரம் கோருகின்றன. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும், தனது ஐக்கிய சட்டத்தரணிகள் குழு, மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை மூலம் உயர் நீதிமன்றத்துக்கு சென்று எதிர்க்கட்சியில் இருந்தவாறே ராஜபக்ஷர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற தீர்ப்பை பெற்றுக்கொண்டது. திருடர்களை பிடிப்போம் என கோப்புகளை காட்டி அரசியல் நாடகங்களை நடத்தாது ஐக்கிய மக்கள் சக்தி செயல் ரீதியாக நடவடிக்கை எடுத்தது.

நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகும்போது ஜனாதிபதி தலைமையிலான நாட்டை அழித்த மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களுடன் இணைந்து தமது விருப்பப்படி நடந்து வருகின்றனர். 

பாராளுமன்றத்தில் 113 பேர் சுகாதாரத்துறையில் நடந்த மோசடிகளுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் இந்நாட்டிலுள்ள தேசிய வளங்கள், மக்களின் வளங்கள், சொத்துக்கள் மற்றும் பணத்தை அபகரித்த குழுக்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது.

வறுமையின் காரணமாக நாட்டு மக்கள் நுண்கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில், வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் வரம்பற்ற அழுத்தங்களை பிரயோகித்து. 

தமது தொழில் இலக்கை முதன்மைப்படுத்தி வர்த்தகர்களால் இது பெரும் கடன் பொறியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கடன் சுமையில் தவிக்கும் மக்களுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இந்த நுண்கடன் திட்டங்களுக்கு வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வைப்புச் சொத்துக்கள் மற்றும் வளங்களை பராட்டே சட்டத்தின் மூலம் ஏலம் விடுவதற்கான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

2024ஆம் ஆண்டு தேர்தல் வருடமாக இருப்பதால், ஏல நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்தாலும், தனியார் நிதி நிறுவனங்கள் போட்டிக்கு ஏலங்களை நடத்தி வருகின்றன என்றார். 

Previous Post

17 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை; எல்பிட்டியவில் சம்பவம்!

Next Post

வெடுக்கு நாறியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் அடாவடித்தனமே – அமைச்சர் டக்ளஸ்

Next Post
தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் | ரணிலுக்கு டக்ளஸ் பதில் கடிதம்

வெடுக்கு நாறியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் அடாவடித்தனமே - அமைச்சர் டக்ளஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures