Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது | ஏபிடி வில்லியர்ஸ்

October 6, 2022
in News, Sports
0
இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது | ஏபிடி வில்லியர்ஸ்

சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓராண்டுக்கு முன்பு அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடருக்கு மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு இணையப்போவதாகத் தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ். ஆனால், அவர் வீரராக இணையப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்துக்குத் திரும்பும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்குத் தன்னுடைய ஆதரவைத் தரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

சமூகதள உரையாடல் ஒன்றின் போது அவர் கூறியதாவது:- அடுத்த ஆண்டு நான் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு செல்லப் போகிறேன். ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்காக அல்ல. ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன். 

கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும். என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது. ஏனெனில் என்னுடைய வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறேன்.

தான் அடுத்து தொடங்கப்போகும் யூடியூப் சேனல் பற்றி அறிவித்த டி வில்லியர்ஸ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் உள்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

இந்த உரையாடலின்போது இப்போதைக்குத் தான் பயிற்சியாளர் ஆகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய மகத்தான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த டி வில்லியர்ஸ் தற்போதைக்கு தன் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதே தன்னுடைய பிரதானம் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும்

அவர் கூறும் போது நான் நிச்சயமாக ஒரு அணியைப் பயிற்சி செய்யும் திட்டத்தில் இல்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுமே பகிர்ந்துகொள்ள நான் நிச்சயம் விரும்புகிறேன். ஆனால் அதற்கான நேரம் வரும்.

ஆனால் இப்போதைக்கு நான் எந்த அணியோடும் இணையத் தயாராக இல்லை. பயிற்சியாளரானால் மீண்டும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் மீண்டும் பயணம் மேற்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பல பயணங்கள் மேற்கொண்டுவிட்ட நான் இப்போதைக்கு சில காலம் என் குடும்பத்தோடு என் நேரத்தை செலவளிக்க நினைக்கிறேன் என கூறி உள்ளார். 

Previous Post

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு

Next Post

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன?

Next Post
டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் பயணம் ஆரம்பமானது!

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures