Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் குறு முன்னோட்டம், பதாகை வெளியீட்டு திகதி அறிவிப்பு

September 29, 2022
in Cinema, News
0
பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் குறு முன்னோட்டம், பதாகை வெளியீட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் படத்தின் குறு முன்னோட்டம் மற்றும் பதாகை வெளியிடப்படும் இடமும், திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதி புருஷ்’. இதில் பாகுபலி படப்புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பொலிவுட் நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாஸட் பரம்பரா இசையமைத்திருக்கிறார். இராமாயணம் எனும் இதிகாசத்தை தழுவித் தயாராகியிருக்கும் இந்த படத்தை டீ சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாரித்திருக்கிறது. 

‘ஆதி புருஷ்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.  இந்நிலையில் இப்படத்தின் குறு முன்னோட்டம் மற்றும் பதாகை ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று  வட இந்தியாவிலுள்ள புனித நகரமான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் வெளியிடப்படவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து இவ்விடத்தில் நடைபெறும் பிரம்மாண்டமாக நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், சுப்பர் ஸ்டார் பிரபாஸ், படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் பங்குபற்றுகிறார்கள். 

இதனிடையே இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதி புருஷ்’ திரைப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படமாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

போதைப்பொருளால் அழியும் வடக்கு | விழிப்புணர்வு பேரணி நாளை!

Next Post

மைத்திரியின் அதிரடி தீர்மானம்!

Next Post
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

மைத்திரியின் அதிரடி தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures