Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

30 வருடங்களாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகிறது | அண்ணாமலை முன் ஆறுதிருமுருகன் எடுத்துரைப்பு

May 4, 2022
in News, Sri Lanka News
0
30 வருடங்களாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகிறது |  அண்ணாமலை முன் ஆறுதிருமுருகன் எடுத்துரைப்பு

யாழ்.காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாகப் பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே தற்போது நாட்டைப் பாடுபடுத்துவதாகச் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

யாழ். வந்த இந்தியப் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையை நல்லை ஆதீன குருமுதல்வர் சன்னிதானத்தில் நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காங்கேசன்துறை பகுதியில் மக்களின் காணிகளைப் பறித்து ஆடம்பர ஜனாதிபதி மாளிகை கட்டியுள்ள நிலையில், மக்களை இன்னும் மீள் குடியேற்றம் செய்யவில்லை.

ஆனால் அப்பகுதியில் காணப்படுகின்ற நான்குக்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் இன்னும் பூசை வழிபாடுகள் இன்றி பூட்டப்பட்ட நிலையில், அதனுடைய சாபங்கலே இன்றைய நாட்டின் நிலைமைக்குக் காரணமாகும்.

சடையம்மா மடம், விஷ்ணு கோயில் மற்றும் சிவன் கோயில் உட்பட அப்பகுதியில் பல இந்து ஆலயங்கள் இருக்கின்ற நிலையில், ஆட்சியாளர்கள் அதனை விடுவித்து பூசை வழிபாடுகள் இடம்பெற அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் எவ்வித அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல, மதத்தலைவர்கள் என்ற ரீதியில் மக்களுடைய பிரச்சினைகளைத் தெளிவாக எடுத்துரைத்தோம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்கள் தீர்வு விடயத்தில் அக்கறையாக உள்ள நிலையில், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய தீர்வும் காணப்பட வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியாரும் உடனிருந்தார்.

Gallery Gallery


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

தப்புமா மகிந்த ராஜபக்‌ஷே ஆட்சி? | இன்று கூடும் இலங்கை பாராளுமன்றம்

Next Post

பிளவுப்படும் பொதுஜன பெரமுன:சிரேஷ்ட தலைவரின் தலைமையில் புதிய கட்சி

Next Post
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

பிளவுப்படும் பொதுஜன பெரமுன:சிரேஷ்ட தலைவரின் தலைமையில் புதிய கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures