Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதவி விலகத் தயார் | ஒரு வேண்டுகோளுடன் பிரதமர் உறுதியளித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவிப்பு

April 28, 2022
in News, Sri Lanka News
0
போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயார். ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்;டதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பதவி விலகுகிறேன்,பதவி விலக தயாராகவுள்ளேன் எவ்வித பிரச்சினையும் கிடையாது.இருப்பினும் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க தாமதம் ஏற்படுமாயின் நாட்டில் அரச நிர்வாகம் இல்லாமல் போகும்.இடைவெளியை நிரப்புவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்.அக்காலப்பகுதியில் நாடு முழுமையாக அழிவு நிலைக்கு செல்லும் என பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வசமுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என பிரதமரிடம் குறிப்பிட்டோம்.ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது.பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகினால் நாடு ஸ்தீரத்தன்மையை இழக்கும்.

நாடு ஸ்தீரத்தன்மையை இழந்தால் தற்போதைய நிலைமை பாரதூரமான விளைவுகளுக்கு கொண்டு செல்லும் என பிரதமர் தொடர்ந்து குறிப்பிட்டார்.நான் பதவி விலக தயார் ,சந்தேகம் கொள்ள வேண்டாம்.பாராளுமன்றில் உள்ள சகல கட்சிகளையும் ஒன்றினைத்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆராயுங்கள் என குறிப்பிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பிரதமர் மஹிந்த கட்டாயம் பதவி விலக வேண்டும் – பாஹியன்கல ஆனந்தசாகர தேரர்

Next Post

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிகளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி உறுதி

Next Post
போர்க்குற்றவாளிகளின் நாடாகிறதா இலங்கை | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிகளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும் - ஜனாதிபதி உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures