Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் | எதிர்க்கட்சி அறிவிப்பு

April 21, 2022
in News, Sri Lanka News
0
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டும் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வில்லை. எனவே தமது அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதனை உறுதி செய்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எழுத்து மூலமாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலையில் கூடியது. இதன்போது சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடையில் அமர்ந்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 3 ஆவது வருடத்தை நினைவு கூர்ந்து, தாக்குதலில் மரணித்தவர்களின் குடுபத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலே இவ்வாறு கறுப்பு நிற ஆடையில் வந்திருந்தனர்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, அதுதொடர்பான எழுத்து மூல உறுதிமொழியை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு அறிவித்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

நெருக்கடியிலிருந்து மீள இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவு | அமெரிக்க தூதுவர் ஜுலி சங்

Next Post

மகிந்த தலைமையில் மீண்டும் உறுதியானது அரசாங்கம்

Next Post
புலிகளின் ஆரம்பகாலத்தை ஞாகபமூட்டி, மஹிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

மகிந்த தலைமையில் மீண்டும் உறுதியானது அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures