Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ நாட்டின் நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வும் இல்லை | ரஞ்சித்

April 14, 2022
in News, Sri Lanka News
0
நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்கு?

ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வும் இல்லை என்பது பிரதமரின் நாட்டு மக்களுக்கான உரையிலிருந்து தெளிவாக புரிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மூலம் புலப்படுவது எமது மக்கள் என்ன கோறுகின்றனர் என்ற நிலைப்பாட்டை முற்றிலும் புரிந்து கொள்ளாத விதமாகவே பதிலை வழங்கியுள்ளார் என்பதையாகும்.

பிரதமரின் அறிக்கையில், நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வை முன்வைக்கவோ அல்லது அதற்குத் தேவையான மாற்றீடுகள் எதுவுமோ முன்வைக்கப்படவில்லை.

குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அனுதாபங்களைக் கூட முன்வைக்கவில்லலை. இதுவரை, நான்கு பேர் எரிபொருள் வரிசையில் இறந்துள்ளனர்.

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதையொத்த அளவே காணப்படுகின்றன.

இப்படிப்பட்ட துரதிஷ்டமான சூழ்நிலையில் மக்கள் படும் துயரங்கள் குறித்து பிரதமருக்கு எந்த புரிதலும் இல்லை என்பது அவரது அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.

அதிஷ்டவசமாக யுத்த வெற்றி மற்றும் இராணுவ வீரர்களை முன்னிலைப்படுத்தி, தங்களுடைய அரசியல் கலாசரத்திற்குள் முன்வைத்து,பழைய புராணத்தை பாடி, ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்ஷக்களை வீட்டுக்குச் செல்லுமாறு இளைஞர் யுவதிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு திரிவுபடுத்தப்பட்ட விளக்கத்தை கொண்டுவர முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலின் வங்குரோத்து என்பதை தெளிவாக காட்டுகிறது.

மோசமான பொருளாதார நிர்வாகம், நெருங்கிய நண்பர்களை கவனித்தல், இலஞ்சத் திட்டங்கள், அதிக வட்டிக்கு கடன் செலுத்தியதன் ஊடாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கடந்த அரசாங்கத்தின் மீது திணிக்க முற்படுவது வேடிக்கையானது.

கோட்டா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என வீதிக்கு இறங்கிய இளைய தலைமுறையினரை 88, 89 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சிகளை ஏற்படுத்திய இளைஞர் இயக்கத்துடன் ஒப்பிட்டு, சமாதான முறையிலான இந்த போராட்டத்தின் மீது அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு வழிவகுத்த பிரதமரின் பேச்சை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒரு வார்த்தையிலோ, தற்போது மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கோ, மக்கள் எழுப்பும் குரலுக்கு பதில் இல்லாத பிரதமரின் பேச்சு, உண்மையின் களத்தின் யதார்த்தத்தை புரிந்துக்கொள்ளாது தான் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையென மக்கள் நினைப்பார்கள் என நினைத்து தெரிவித்தது சுய ஏமாற்றாகும்.

ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வும் இல்லை என்பது இந்த உரையிலிருந்து தெளிவாக புரிகிறது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Previous Post

புதுவருடப்பிறப்பிலும் வீட்டுக்குச் செல்லாது மக்கள் போராட்டம்

Next Post

இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு

Next Post
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures