Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு கடத்த இருந்த கேரள கஞ்சா பொதிகளுடன் தமிழகத்தில் மூவர் கைது

April 8, 2022
in News, Sri Lanka News
0
இலங்கைக்கு கடத்த இருந்த கேரள கஞ்சா பொதிகளுடன் தமிழகத்தில் மூவர் கைது

தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம்  இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சா மூட்டைகளுடன் நேற்று வியாழக்கிழமை (7) இரவு மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு கடல் வழியாக கேரள கஞ்சா கடத்தப்பட உள்ளதாக வேதாரண்யம் கடலோர காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை (7) இரவு குறித்த பகுதிக்குச் சென்ற வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 09 சாக்கு மூட்டைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது அதில் கேரள கஞ்சா உள்ளமை தெரிய வந்தது.

இதன்போது வாகனத்தை ஓட்டி வந்த ஆறு காட்டுத்துறை, சுனாமி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள்  ஆறுகாட்டுத்துறை வடக்குத் தெருவைச் சேர்ந்த   பாரதிதாசன்  என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இந்த நிலையில் குறித்த நபரையும் பொலிஸார் கைது  செய்துள்ளதோடு,   மேலும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த பரமத்தி வேலூர் இலங்கை அகதி முகாமில் உள்ள காந்தரூபன் என்பவரையும்,   சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணைகளின் போது 9  சாக்கு மூட்டைகளில் இருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 260 கிலோ கேரள கஞ்சா இலங்கைக்கு கடத்த இருந்தமை  தெரியவந்தது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்!

Next Post

இன்று முதல் 296 பஸ்கள் விசேட சேவையில்

Next Post
மறுசீரமைக்கப்பட்ட 200 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

இன்று முதல் 296 பஸ்கள் விசேட சேவையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures