Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக | சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை !!

April 6, 2022
in News, Sri Lanka News
0
போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக | சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை !!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுவாக கூறிவருவதோடு, 2015ம் ஆண்டு 1.8 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கான கோரிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர். ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் உட்பட பல சர்வதேச வளஅறிஞர்களும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ‘ராஜபக்ச குடும்பத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்பதோடு ‘போர்குற்றவாளிகள்’ என சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்கள் போராட்ட முழக்கமொன்று பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

‘தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரச கட்டமைப்பு நிகழ்த்திய இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும், அதற்கான பரிகாரநீதியிலான அரசியல் தீர்வுமே இலங்கைத்தீவுக்கான முழுமையான நிலையான அமைதியினை தரும்’ என இவ்விடயம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய அதிபராக இருக்கின்ற கோத்தபாய இராஜபக்ச, பிரதமர் மகிதந்த ராஜபக்ச உட்பட 12 அரசியல், இராணுவ தலைவர்களை ‘இனப்படுகொலையாளிகளாக’ (DIRTY DOZEN – Genocidaires and War Criminals on Tamils in Sri Lanka) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னராக பட்டியலிட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

வரலட்சுமி சரத்குமாரின் ‘சபரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் | பேராசிரியர் கீதபொன்கலன்

Next Post
சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் | பேராசிரியர் கீதபொன்கலன்

சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் | பேராசிரியர் கீதபொன்கலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures