Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயணங்கள் தொடர்பில் முகப் புத்தகத்தில் பதிவதை தவிருங்கள்

March 28, 2022
in News, Sri Lanka News
0
பெண் காவலர் ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில்,  போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மூலம் பெரும்பாலும் பதிவாகும் திருட்டுக்கள், வழிப் பறிக் கொள்ளைகள், வாகன உதிரிப்பாக திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறு  பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ்  ஊடகப் பேச்சாளர், பொலிஸ் குற்றவியல் பிரிவின் பிரதானி சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, பொலிஸ் தலைமைகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த வேண்டுகோளை விடுத்தார்.

குறிப்பாக பண்டிகை காலத்தில், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் மக்கள் தமது வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் தரித்து வைப்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அசையும் சொத்துக்களை அணிந்த வண்ணமும்  சுமந்த வண்ணமும் பயணிப்போர், தம்மை சுற்றி நடப்பவை தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் வழிப் பறி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு  உள்ளாகும் சந்தர்ப்பத்தை, அவ்வாறு விழிப்பாக இருப்பதன் ஊடாக தவிர்த்துகொள்ள முடியும் எனவும்  அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, பண்டிகை காலத்தில், தாம் பயணங்களை முன்னெடுக்கும் போது, அது தொடர்பிலான புகைப்படங்கள், குறிப்புக்களை முகப் புத்தகம் வாயிலாக பகிர்வதை தவிர்க்குமாறும், அவ்வாறு பகிர்வதன் ஊடாக வீடுடைத்து திருடும் சம்பவங்கள் உள்ளிட்ட திருட்டுகள் பதிவாகலாம் எனவும்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களை எச்சரித்துள்ளார்.

Previous Post

7 ஆவது ரஷ்யப் படைத்தளபதி உக்ரேன் மோதலில் பலி

Next Post

சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடி விவாதம் அவசியம் : ரணில் வலியுறுத்தல்

Next Post
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் பிரதமர் விடுத்த கோரிக்கை

சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடி விவாதம் அவசியம் : ரணில் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures