Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஞ்சத்தால் நிகழும் மரணங்களுக்கு பஷில் ராஜபக்ஷவே பொறுப்பாளி | உதய கம்மன்பில

March 17, 2022
in News, Sri Lanka News
0
பஞ்சத்தால் நிகழும் மரணங்களுக்கு பஷில் ராஜபக்ஷவே பொறுப்பாளி | உதய கம்மன்பில

அத்தியாவசிய மருந்து பொருட்கள் இல்லாமல் நாட்டில் பதிவாகும் மரணங்களுக்கும், நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களாணையை பஷில் ராஜபக்ஷ  விமர்சனத்திற்குள்ளாக்கி விட்டார் என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள், எரிவாயு சிலிண்டர் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நாட்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான நிதி முகாமைத்துவத்தினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த வருடம் இறக்குமதி செலவு 20.1பில்லியன் டொலர்களாக காணப்பட்டது.எரிபொருள் நிலக்கரி,எரிவாயு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு மாத்திரம் கடந்த ஆண்டு 4.6 பில்லியன் டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது.அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதிக்கு மாத்திரம் 6 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதியை தற்காலிகமாக மட்டுப்படுத்துமாறு அமைச்சரவையிலும்,நிதியமைச்சருடனும் பலமுறை அறிவுறுத்தினோம். அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு நிதியமைச்சிடம் முன்வைத்த கோரிக்கை குறித்து அவர் அவதானம் செலுத்தவில்லை.

அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதியை மட்டுப்படுத்த அமைச்சரவை முன்னெடுத்த தீர்மானத்தை நிதியமைச்சர் செயற்படுத்தவில்லை. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 2021.10.01ஆம் திகதி பொருளாதார மீட்சிக்கான ஆறுமாத கொள்கை திட்டத்தை முன்வைத்தார். மத்திய வங்கி முன்வைத்த 6மாத கொள்கை திட்டத்தை நிதியமைச்சர் இதுவரையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை வேண்டுமென்றே நிதியமைச்சர் பாதிப்பிற்குள்ளாக்குகிறார்.

ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒருவருட காலமாக வலுக்கட்டாய முறையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எரிபொருள் அதிகரிப்பிற்கு பிரதான காரணியாக அமைகிறது. கறுப்பு பண சந்தையினை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ முழுமையாக ஆதரிக்கிறார். மத்திய கிழக்காசிய நாடுகளில் உள்ளவர்கள் கறுப்பு சந்தை ஊடாக பணபரிமாற்றலில் ஈடுப்படுவதால் வங்கி கட்டமைக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வது குறித்து நிதியமைச்சர் அக்கறை கொள்ளவில்லை. பொருளாதாரத்தை திட்டமிட்டு மென்மேலும் பாதிப்பிற்குள்ளாக்குகிறார். மருந்து பொருட்கள் இல்லாமல் நாட்டில் பதிவாகும் மரணங்களுக்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பயங்ரவாத தடைசட்ட திருத்தம் | பிரான்ஸ் செனட்சபை உறுப்பினர்களுக்கு பீரிஸ் விளக்கமாம்

Next Post

பீஸ்ட்’ அப்டேட்

Next Post
சாதனை சிகரத்தைத் தொட்ட ‘அரபிக் குத்து’

பீஸ்ட்' அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026

Recent News

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures