Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொலைக்களமான கிரிக்கெட் மைதானம்: அடித்து கொல்லப்பட்ட இலங்கை வீரர்

September 28, 2016
in News, Sports
0

கொலைக்களமான கிரிக்கெட் மைதானம்: அடித்து கொல்லப்பட்ட இலங்கை வீரர்

இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ‘வைட்’ பந்தாக வீசியதில் 14 வயது துடுப்பாட்ட வீரருக்கும், 15 வயது பந்துவீச்சாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த துடுப்பாட்ட வீரர் 15 வயது பந்துவீச்சாளரை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.

உயிரிழந்த சிறுவனுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள பொலிசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

சிவாஜி புரொடக்ஷனில் விஜய் 61 – எதிர்பார்க்காத இயக்குனருக்கு அழைப்பா ?

Next Post

பதக்க நாயகி சிந்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Next Post

பதக்க நாயகி சிந்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures