Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Health

போக்குவரத்து மாசுபாட்டால் ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்து வருகிறதா?

February 27, 2022
in Health, News
0
போக்குவரத்து மாசுபாட்டால் ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்து வருகிறதா?

உலகம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து தொடர்பான மாசுபாட்டால் ஆஸ்துமா பாதிப்புக்கு உள்ளாகுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனை அறிந்து ஆஸ்துமா குறித்த முழுமையான விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய திகதியில் பச்சிளங்குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான சிறார்கள் வரை ஓஸ்துமா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது மாசடைந்த காற்று மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், சாலைகளில் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளாலும் உருவாகும் காற்று மாசின் காரணமாக ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அதே தருணத்தில் ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் இன்ஹேலர் மற்றும் நெபுலைஸர் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

இத்தகைய பாதிப்பின் போது நுரையீரலின் கீழ்பகுதியில் உள்ள காற்று அறைகள் பாதிக்கப்படுவதால் அங்கு வரை மருந்துகள் செல்ல வேண்டும் என்பதற்காக நெபுலைசர் மற்றும் இன்ஹேலர் ஆகிய கருவிகளை பயன்படுத்தி மருந்துகளை மருத்துவர்கள் வழங்குகிறார்கள். இது பாதுகாப்பான சிகிச்சை முறை தான். சில குழந்தைகளுக்கு மட்டும் இன்ஹேலர் முறையில் மருந்தினை வழங்கும் பொழுது கூடுதல் கருவியினை பொருத்தி மருந்தினை செலுத்துவது நல்ல பலனை அளிக்கும் என்றும், கூடுதல் கருவிகளைப் பொருத்தி இன்ஹேலர் மூலம் மருந்தினை வழங்கும் போது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கால அவகாசத்தை மனதில் இருத்தி நிவாரணத்தை தொடரவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் ஆயிஷா.

தொகுப்பு அனுஷா.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நாளை 5 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு

Next Post

ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு வழங்கப்பட்ட கௌரவ தலைவர் பதவி அதிரடியாக ரத்து!

Next Post
ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி

ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு வழங்கப்பட்ட கௌரவ தலைவர் பதவி அதிரடியாக ரத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures