Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோப்ப நாயிடம் சிக்கிய சந்தேக நபர்கள் – இதுவரை 193 பேர் கைது

February 27, 2022
in News, Sri Lanka News
0
மோப்ப நாயிடம் சிக்கிய சந்தேக நபர்கள் – இதுவரை 193 பேர் கைது

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக அட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட அட்டன் – கொழும்பு மற்றும் பலாங்கொடை, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, கினிகத்தேனை தியகல, நோர்ட்டன்பிரிட்ஜ் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள், தடைசெய்யப்பட்ட சிகரட்டுக்கள், மதன மோதக போதைப்பொருள், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது ஸ்டூட் என்ற பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாயின் உதவியுடன் சுமார் 87 போதைப் பொருட்கள் வைத்திருந்த நபர்களை அட்டன் பொலிஸார் மாத்திரம் கைது செய்துள்ளதாகவும், கடந்த காலங்களில் அட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து கோரா என்ற நாயின் குறைப்பாட்டினை தற்போது உள்ள ஸ்டூட் மோப்ப நாய் நிவர்த்தி செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு தினங்களாக அட்டன் கோட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில், விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரேமலால் மற்றும் அட்டன் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் அவர்களுடைய ஆலோசனைக்கமைய  பொலிஸ் பரிசோதகர் தசநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிவனொளிபாதமலை யாத்திரை செல்வதற்காக கேரள கஞ்சாவுடன் சென்ற 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் அட்டன் நீதவான் முன்னலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

உக்ரேன் மீதான படையெடுப்பால் ரஷ்யா சுமார் 4,300 பேரை இழந்ததாக தகவல்

Next Post

நாளை 5 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு

Next Post
கல்முனையில் முன்னறிவித்தலின்றி மின்சாரத்தைத் துண்டிப்பு: மக்கள் மக்கள் அசௌகரிகம்

நாளை 5 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures