Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிட்டி லீக் – எக்ஸ்போ லங்கா யூத் கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகள்

February 27, 2022
in News, Sports
0
சிட்டி லீக் – எக்ஸ்போ லங்கா யூத் கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகள்

சிட்டி புட்போல் லீக் ஏற்பாடு செய்துள்ள 19 வயதுக்குட்பட்ட சிட்டி லீக் – எக்ஸ்போ லங்கா யூத் கிண்ண கால்பந்தாட்டத்தில் கடைசி இரண்டு கால் இறுதிப் போட்டிகள் சிட்டி லீக் மைதானத்தில் இன்றும் நாளையும்  நடைபெறவுள்ளன.

இன்று  சனிக்கிழமை 26 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டியில் கலம்போ எவ்சி இளையோர் அணியை மாளிகாவத்தை யூத் அணி எதிர்த்தாடவுள்ளது.

18 இளையோர் அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் மிகவும் பலம்வாய்ந்த அணியாக திகழும் கலம்போ எவ்சி இளையோர் அணி தோல்வி அடையாத அணியாக பி குழுவிலிருந்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

பேர்கசன் (4 – 0), வைக்கிங்ஸ் (7 – 0), ஜாவா லேன் (2 – 0), ஸ்லேவ் ஐலண்ட இலவன் (3 – 0) ஆகிய இளையோர் அணிகளை கலம்போ எவ்சி இளையோர் அணி மிக இலகுவாக வெற்றிகொண்டது.

இந்த 4 போட்டிகளில் மொத்தமாக 16 கோல்களைப் போட்ட கலம்வோ எவ்சி இளையோர் அணி எதிரணிகளுக்கு ஒரு கோலைத்தானும் விட்டுக்கொடுக்கவில்லை.

இவ்வணியை எதிர்த்தாடும் மாளிகாவத்தை யூத் அணியும் தோல்வி அடையாத அணியாக ஏ குழுவிலிருந்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது. எனினும் அதன் போட்டி முடிவுகள் சிறப்பாக அமையவில்லை.

சோண்டர்ஸ் (2 – 0), விக்டரி (2 – 1) ஆகிய இளையோர் அணிகளை வெற்றிகொண்ட மாளிகாவத்தை யூத் குறே (0 – 0), யங் சில்வர் (1 – 1) ஆகிய இளையோர் அணிகளுடனான போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

கலம்போ எவ்சி இளையோர் அணியிலும் மாளிகாவத்தை யூத் அணியிலும் மிகச் சிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் நாளைய கால் இறுதிப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூடப்பட்ட அரங்கில் ஜாவா லேன் – சோண்டர்ஸ்

ஜாவா லேன் இளையோர் அணியும் சோண்டர்ஸ் இளையோர் அணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கடைசி கால் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்தப் போட்டியை மூடிய அரங்குக்குள் நடத்துவதற்கு சிட்டி லீக் நிருவாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த இரண்டு அணிகள் சம்பந்தப்பட்ட போட்டியின்போது இடம்பெற்ற அசம்பாவிதம் மீண்டும் இடம்பெறாமிலிருப்பதை உறுதி செய்யும்வகையில் சிட்டி லீக் நிருவாகத்தினரும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினரும் இப் போட்டியை மூடிய அரங்கில் நடத்த தீர்மானித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வலிமை படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

Next Post

இலங்கையில் நாளாந்தம் 4 மடங்காக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

Next Post
கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

இலங்கையில் நாளாந்தம் 4 மடங்காக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures