Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்

January 17, 2022
in News, கிருபா பிள்ளை பக்கம்
0
தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த  விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்

இலங்கை வரலாற்றில் அரசியல் ஆட்சி மாற்றங்களின்போது எத்தனையோ ஏமாற்றங்களைக் கண்ட பிறகும் அதனை குறித்த வரலாற்று அனுபவ அறிவு இல்லாமல் தமிழ் மக்களாகிய நாம் மீண்டும் மீண்டும்  ஏமாறக்கூடாது.

தற்போது ஸ்ரீலங்காவின் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எந்த வேளையில் ஆட்சி கவிழ்ப்பு நடக்கலாம் என்ற நிலை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிலங்கையின் குத்துவெட்டு பெருக்கமடைகிறது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற தென்னிலங்கை கட்சிகள் ஏதேனும் முயன்றால் அதற்கு தமிழ் மக்களின் தலைவர்கள் இடமளிக்கக்கூடாது. தமிழ் மக்களை கறிவேப்பிலையாக தென்னிலங்கை பயன்படுத்தக்கூடாது.

கடந்த ஆட்சியில்கூட மைத்திரி – ரணில் தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றது. ஆனால் தமிழர்களுக்கு என்ன தீர்வை தந்தது? போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் வேலையைத்தான் செய்தது.

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய சூழலை இன்னும் பல ஆண்டுகளுக்கு தள்ள வைத்தது. இனப்பிரச்சினையின் ஆரம்பப் புள்ளிக்கு தமிழ் மக்களை மீண்டும் தள்ளியது.

தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். எனவே தென்னிலங்கை ஆட்சி மாற்றம் எமக்கு விமோசனம் தரும் என்று மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் வேலைகளில் கட்சிகள் ஈடுபடக்கூடாது.

இன்று ஆட்சியில் இருப்பவர்கள், தமிழ் மக்கள்மீது நடாத்திய இனப்படுகொலைகளுக்கும் தமிழர் நிலத்தில் அரங்கேற்றிய மனித குல விரோதச் செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

அவர்களை காப்பாற்றும் வேலையை செய்யாத வகையில் எமது அரசியல் நகர்வுகள் புத்திசாதுரியமாக அமைய வேண்டும். போரால் காயப்பட்ட எமது மக்களை மீண்டும் மீண்டும் ஸ்ரீலங்கா அரசுபோல தமிழ் தலைமகளும் ஏமாற்றக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

கிருபா பிள்ளை


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் எவரும் ஈடுபடக்கூடாது | மஹிந்த

Next Post

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

Next Post
ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures